கட
121
பாங்கியிற் கூட்டம்

 
கொண்டு நிலைகூறல்:
கொண்டு  நிலைகூறல்  என்பது,  தலைவன்  உயிரைத் தாங்கிக் கொண்டு நிற்கும்
நிலைமையாகிய மொழியைப் பாங்கி கூறல்.

  வெண்டோ டணிமுகப் பைங்குரும் பைக்கொங்கை வெய்யவுண்கட்
கண்டோர் விரும்புங் கரும்பனை யாரைக் கடற்றுறைவா
கொண்டோர் குறைமுடி கொம்பனை யார்நின் குறைமறுத்தால்
வண்டோ லிடுந்தொங்க லான்வாணன் மாறை வளநகர்க்கே.

     (இ-ள்.) கடற்றுறைவா!   கொம்பனையார்   நினது   குறையை  மறுத்தால்,
வெண்மை நிறம்  பொருந்திய  தோடணிந்த  முகத்தையும், பசிய குரும்பையாகிய
கொங்கையையும்,  உண்ணப்  பட்ட  வெய்ய   கள்ளையுமுடைய   கண்டோரால் விரும்பப்படுகின்ற  கரிய  பனையாரைக்  கொண்டு,  வண்டுகள்   ஆரவாரிக்கும் மாலையையணிந்த   வாணன்   மாறையாகிய   வளவிய   நகரிடத்து   ஒப்பற்ற
நின்குறையை முடிப்பாயாக என்றவாறு.

கொம்பனையார்  மறுத்தகாலையில்  தோடணிந்த  முகமும்,  குரும்பை   போன்ற
கொங்கையும்,  உன்  கண்ணுமுடைய  கரும்பு  அனையாரைக்  கொண்டு  எனச்
சிலேடையால் ஒரு பெண்ணாகத் தோன்றியவாறுஉணர்க.

      `மறுத்தாற் குறைமுடி` யெனவே, குறிப்பான் மறாளெனத் தோன்றி நிற்றலில்,
அவன்   உயிரைத்  தாங்கிக்கொண்டு  நிற்கும்  நிலைமையாயிற்று.   முன்கூறிய
செய்யுட்களில்,   `வெற்பன் சிலம்பன் பொருப்பன்`   என்று    குறிஞ்சிநிலத்துத்
தலைமகனாகக்   கூறி,   இவ்விடத்தில்  `கடற்றுறைவா`  என்று  நெய்தனிலத்துத்
தலைமகனாகக்  கூறியவதனான்,  முன்கூறிய  தலைவனேயோ  இவன் வேறேயோ
எனின்,  அத்தலைவன்தானே   இவன்.   ஐந்திணையில்   எத்திணை   கூறினும்
அத்திணைக்குரிய    கருப்பொருளாற்    கூறப்படும்;    ஆயின்.     இக்கிளவி
எத்திணைப்பாற்படுமெனின்,   நெய்தற்பாற்படும்.  அஃதென்னை யெனின்,  பனை
நெய்தனிலத்துக் கருப்பொருளாதலான்.  `கடற்றுறைவா` எனக் கூறியவாறு.  பனை
நெய்தனிலத்துக்     கருப்பொருளானவாறு    என்னை    யெனின்,    குறிஞ்சி
கற்பூமியாதலான் பனைக்காதது: பாலைக்குத்  தீந்து போவதல்லது பயிராவதில்லை;
முல்லை,  வரகு  சாமை முதிரை  முதலாயின உணவும்,  நிழலுமாக  இருத்தலின் பனைக்காகாது; மருத நிலத்திற்கு வாவியும், குளனும்,  கமுகு,  வாழை,  செந்நெல்,
கரும்பு முதலியனவும்  நீர்ச்சார்பாதலின், அந்நிலத்திற்கும்  பனையாகாது;  மணல்
நிலத்திற் பயிராதலால் நெய்தனிலத்துக் கருப்பொருளாயிற்று.