கட
129
பாங்கியிற் கூட்டம்

 
       உலகத்தில் கலியிருள் மாற்றுந் தன்மையால்,  `திவாகரனே யன்ன`  எனக்
கூறியது.

      ஒளி - கீர்த்தி.     உவாமதி - பூரணமதி.       ஒளிர்தல் - விளங்குதல்.
கவான் - திரட்சி. `மாயோ னன்ன மால்வரைக் கவான்` என்றார் பிறரும். வண்டல்:
ஆகுபெயர். `வண்டலாடுழை` என்று பாடமோதுவாரும் உளர்.
(119)    
பாங்கியைத் தலைவி மறைத்தல்:
  செவ்வண்ண வேல்விழி யாய்தஞ்சை வாணன்தென் மாறைநன்னாட்
டிவ்வண்ண நீசொல்வ தேற்பதன் றானின் னிடையெனத்தாம்
மெய்வண்ணம் வாடி வெறிதே வருந்தி விருந்தினராய்க்
கைவண்ண வார்தழை கொண்டுசென் றார்தமைக் கண்டுகண்டே.

     (இ-ள்.) செவ்வண்ணமாகிய      வேல்போன்ற      விழியினையுடையாய்,
தஞ்சைவாணன் தென்மாறை நன்னாட்டில், நின்னிடை போல தாம்  மெய்வண்ணம்
வாடிப் பயனின்றி  வருந்தி நம்  புனத்திற்குப்  புதியோராய்க்  கையிலே  அழகிய
நெடிய தழையைக் கொண்டுவந்து போனார் தம்மைக் கண்டு கண்டு, இவ்வண்ணம
்நீ சொல்வது ஏற்பதன்று என்றவாறு.

     செவ்வண்ண   வேல் - பகைவருடற்    குருதி தோய்ந்த கொடிய  வேல்.
இவ்வண்ணம் - இவ்வாறு.    ஆல் : அசைநிலை.     வெறிதே - பயனின்றியே.
விருந்தினர் - புதியோர். வண்ணம் - அழகு. கண்டு கண்டு: அடுக்குமொழி.
(120)    
பாங்கி யென்னை மறைப்ப தென்னெனத் தழால்:
      பாங்கி   என்னை   மறைப்பது   என்னெனத்  தழால் என்பது, இவ்வாறு
மறைத்துக்  கூறிய  தலைவியை  உனக்கு  நான்  வேறோ  என்று உவகையாய்த்
தழுவிக்கொண்டு கூறல்.

  பரக்கின்ற செவ்விதழ்ப் பங்கயப் பாதம் பணிந்துநின்னை
இரக்கின்ற தொன்றையும் எண்ணலை யாலெழு பார்முழுதும்
புரக்கின்ற கோன்றஞ்சை வாணன்பொதியிலிற் பொய்த்தென்னைநீ
கரக்கின்ற தென்னைகொ லென்னுயி ராகிய காரிகையே.

      (இ-ள்.) ஏழுலக  முழுதும்  காக்கின்ற  வேந்தாகிய  தஞ்சை   வாணனது
பொதியவரைக்கண் எனக்கு உயிரையொக்குங் காரிகையே!  செவ்விதழ்  பரக்கின்ற
பங்கயம் போன்ற பாதத்தைத் தொழுது யான் நின்னை யிரக்கின்ற   தொன்றையும்
எண்ணலையாய் உண்மையை நீக்கி என்னை நீ மறைப்பது என்னோ என்றவாறு.