கட
தஞ்சைவாணன் கோவை
130

 
           ஆல்: அசை.  புரத்தல் - காத்தல்.  பொய்த்தல் - உண்மை  நீக்கல்.
கரத்தல் - மறைத்தல்.   `தஞ்சைவாணன்  பொதியிலில்  என்னுயிராகிய  காரிகை`
எனவும், `செவ்விதழ் பரக்கின்ற` எனவும் மாறுக. வருந்துழி வருந்தியும், மகிழ்ந்துழி
மகிழ்ந்தும், இறந்துழி  இறந்தும் இயைவதாகலின், `என்னுயிராகிய காரிகை`  என்று
கூறினார்.
(121)    
பாங்கி கையுறை புகழ்தல்:
சூடத் தகுவன வல்லதெல் லாம்படி சொல்லினுந்தாம்
வாடத் தருவன வல்லநல் லாய்தஞ்சை வாணன்வெற்பர்
தேடத் தகுவன வல்தல் லாத சிலம்பினுள்ளார்
நாடத் தகுவன வல்லகல் லார நறுந்தழையே.

    (இ-ள்.) நல்லாய்!   உலகமெல்லாஞ்  சொல்லினும்  சொல்லா   தொழியினும்
மலையிடத்துத்  தோன்றிய  இச்  சந்தன  நறுந்தழை சூடத்தகுவன வல்லது, தாம்
வாடத்  தகுவன  அல்ல;  அன்றியும்,  தஞ்சைவாணன்  வெற்பர்  தேடத்தகுவன
வல்லதல்லாத மலையினுள்ளார் நாடத்தகுவன அல்ல என்றவாறு.

     `படியெல்லாம்`    என   மாறுக.    `சொல்லினும்`    என்புழி    உம்மை
எதிர்மறையாகலின்,  `சொல்லாதொழியினும்` என்பது,  வருவிக்கப்பட்டது.  `அல்ல`
என்பது  அஃறிணைப்  பன்மைவினைக்குறிப்பு  முற்றுச் சொல்.  நாடல் - கருதல்.
கல் - மலை. ஆரநறுந்தழை - சந்தனத்தழை.

    இவற்றுள்  பாங்கி  கூற்றாயினவெல்லாம்,  `குறைநயப்பித்தற்`கும்,    தலைவி
கூற்றாயினவெல்லாம், `மறுத்தற்`கும், உரியவாறு உணர்க.
(122)    
தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்:

    தோழி   கிழவோன்  துயர்நிலை  கிளத்தல்  என்பது,  பாங்கி   தலைவனது
வேட்கையால் கொண்ட துயர்நிலையைத் தலைவிக்குக் கூறல்.

  வனையுங் குழல்வஞ்சி வாணன்தென் மாறை வரைக்களிறு
தினையுந் தழையும் பிடியொடு மேய்ந்து தெளிந்தவின்னீர்
சுனையுண்ட சோக நிழற்சோக நீங்கித் துயில்வதுகண்
டெனையுங் கடைக்கணி யாவினை யாநிற்பர் ஏதிலரே.

    (இ-ள்.) அலங்கரிக்குங்  கூந்தலையுடைய   வஞ்சி!  நம்புனத்து  அயலாராய்
வந்தோர்,  வாணன்  தென்மாறை  வரையிடத்துக்  களிறு  பிடியோடு  தினையும்
தழையும் மேய்ந்து,  சுனையிடத்துத்  தெளிந்த இனிய நீரையுண்டு, துன்பம் நீங்கி, அசோகமரத்து   நிழலின்கீழ்த்    துயில்வதனைப்     பார்த்து,     என்னையும்
கடைக்கண்ணால் நோக்கி வருந்தா நிற்பர் என்றவாறு.