கட
131
பாங்கியிற் கூட்டம்

 
     `வஞ்சி ஏதிலர்`  எனவும்,   `களிறு பிடியொடு`  எனவும்,  `சுனைத்தெளிந்த
வின்னீர்` எனவும், `உண்டு சோக நீங்கி` எனவும் மாறுக. வனைதல் - அலங்கரித்தல்.
வஞ்சி : அண்மை விளி.  இனையா நிற்பர் - வருந்தாநிற்பர்.  ஏதிலர் - அயலார்.
கடைக்கணித்தல் - கடைக்கண்ணால் நோக்குதல். `பிடியொடு துயிலுங்  களிற்றைக்
கண்டு என்னையும்  நோக்காநிற்பர்`  எனவே  நீ  இதனை  யறிந்திலை  யெனக்
குறிப்பால் அறிவித்தவாறாயிற்று.
(123)    
மறுத்தற் கருமை மாட்டல்:
மறுத்தற்கு  அருமை  மாட்டல்  என்பது,  இவ்வாறு  கூறிய  சொற்கட்கு  விடை
யின்மையால்,  இனி  அவர் வரின் என்னால் மறுத்தற்கு  அரிதெனப் பொருத்திக்
கூறுதல். மாட்டல் - பொருத்துதல்.

  கையுந் தழையுமுன் காண்டொறுங் காண்டொறுங் கட்டுரைத்த
பொய்யுந் தொலைந்தன பூந்தழை போலரி போர்த்துநஞ்சும்
மையுங் கலந்துண்ட வாள்விழி யாய்தஞ்சை வாணன்வெற்பர்
மெய்யுந் துவண்டதென் னான்முடி யாது வெளிநிற்கவே.

     (இ-ள்.) செவ்வரியை மேற்கொண்டு நஞ்சும் மையும் கலந்துண்டவாள்போல்
விழியாய்!  இவ்   வனத்திலுள்ள  மாந்தழைகளெல்லாம்  நமக்குக்  கொண்டுவந்து
கொண்டுவந்து  வாடியெறிதலால்,  அப் பூந்தழைகள்  தொலைந்தாற்போல்,  அவர்
கையுந் தழையும் எதிரே காணுந்தோறும்  காணுந்தோறும்  யான்  உறுதிச்சொல்லா
யுரைத்த   என்னிடத்திலுண்டான   பொய்யெல்லாந்   தொலைந்தன;  அன்றியும்,
தஞ்சைவாணன்  வெற்பர்  மெய்யும்  அலைந்தலைந்து  துவண்டதாதலால்,  இனி
அவர் வரின் வெளியாய் நிற்க என்னால் முடியாது என்றவாறு.

     எனவே, அவர்  வரின்  மறையவேண்டும்  என்பதாயிற்று. கட்டுரைத்தல் -
உறுதிச்சொற் கூறுதல். அரி - செவ்வரி.
(124)    
தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறுதல்:
     தலைவன் குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல் என்பது, தலைவன் எண்ணுங்
குறிப்பு நம் பக்கல் இரப்பவன் போற்றோற்றவில்லை, வேறு நினைப்பானாகத்
தோன்றியதென்று ஒழுங்குபடக் கூறுதல்.

  விடையான் மிசைவரு மேருவில் லானொடு மேழிவென்றிப்
படையா னொடும்வெம் பகைகொள் வதோபகல் போலுமெய்ம்மை
உடையா னுயர்தஞ்சை வாணனொன் னாரென வொல்கியநுண்
இடையாய் பிறிதுகொ லோவறி யேன்வெற்ப ரெண்ணுவதே.