|
|
(இ-ள்.) நடுவு நிலைமையையும் வாய்மையையும் உடையான் எல்லார்க்கும் புகழாலுயர்ந்த தஞ்சைவாணனுக்கு ஒன்னாரெனத் துவண்ட நுண்ணிய இடையையுடையாய், வெற்பர் என்ணுவது விடையான்மேல் வருந்தன்மையையுடைய மேருவில்லானோடும், மேழியைத் தனக்கு உறுப்பாகவுடைய வெற்றிப் படையை யுடையானோடும் வெய்ய பகைகொள்வதோ, பிறிதோ, அறியேன் என்றவாறு.
|
விடை - இடபம்; விடை ஆன்: பண்புத்தொகை. மேரு வில்லான் - சிவன். மேழிவென்றிப்படை - கலப்பை. படையான் - பலதேவன். சிவனுடன் பகைகொள்ளுதல் - எருக்கமாலை என்பு மாலை யணிதல். பலதேவனோடு பகைகொள்ளுதல் பனையை வெட்டுதல். பனை அவனுக்குக் கொடியெனவே மடலேறுங் குறிப்புத் தோன்றியது. `பிறிது` என்பதனால் வரை பாய்தல் கொள்க. பகல் - நடுவு நிலைமை. போலும்: அசைநிலை. 1`ஒப்பில் போலியு மப்பொருட் டாகும்` என்பதனால் அறிக. மெய்ம்மை - வாய்மை. கொல்: ஐயம். ஓகாரம்: அசைநிலை. |
(125) |
தோழி தலைவியை முனிதல்: |
| தூற்றா தலரை மறைப்பவர்க் கேகுறை சொல்லுகுற்றம் ஏற்றா தொழியெனை யெம்பெரு மாட்டிசென் றேற்றவர்க்கு மாற்றா தருள்செங்கை வாணன்தென் மாறையில் வந்துநெஞ்சம் போற்றாது நின்றய லேன்சொன்ன தீங்கு பொறுத்தருளே.
|
(இ-ள்.) எம்பெருமாட்டி, தூற்றாது அலரை மறைக்கின்ற நினக்கு உண்மையானவர்க்கே நின் மனக்குறையைச் சொல், என்னைக் குற்றமேற்றாது விடு; சென்று ஏற்றவர்க்கு இல்லை யென்னாது கொடுக்குஞ் செங்கையை யுடைய வாணன் தென்மாறை நாட்டில், நின்பக்கத்தில் வந்து நெஞ்சத்தைக் காவாமல், அயலேனாகிய யான் அறியாமற் சொன்ன குற்றத்தைப் பொறுத்தருள்வாயாக என்றவாறு. |
`ஏனைக் குற்றம்` எனவும், `வந்துநின்று` எனவும் இயையும். போற்றாது - காவாது. |
(126) |
தலைவி பாங்கியை முனிதல்: |
தலைவி பாங்கியை முனிதல் என்பது, பாங்கியை முனிந்து தலைவி தன்னுட் கூறல்.
|
| மற்றே தவர்நினை வார்தஞ்சை வாணன் வரையின்முந்நாள் |
|
1. தொல். சொல். இடையியல் - 30. |