|
|
வல்ல வாணனாகிய வயல்சூழ்ந்த தஞ்சை வேந்தனை வாழ்த்தல் செய்யாத பகைவரறிவு போலும் என்றவாறு.
|
எனவே, காலமிடனறியாது மதிகெட்டுக் கூறுவர் பகைவர்; அவரறிவையொக்கும் கட்டுரை கூறுவா ரறிவு என்றவாறாயிற்று. |
`பூவலர்வாவி` வினைத்தொகை. புன்மை - இழிவு. கடம் - மதம். மதுகை - வலி. வியன் - விரிவு. |
(146) |
தலைவி பாங்கியொடு பகர்தல்: |
தலைவி பாங்கியொடு பகர்தல் என்பது, வெறுப்பால் முன்னிலைப் புறமொழி கேட்ட பாங்கி தலைவியை யுபசரித்தலால் வெறுப்பு நீங்கிப் பாங்கியொடு பகர்தல்.
|
| முலையார் முயக்கினு மல்லா விடத்தினு மூரிமுந்நீர் அலையா ரமுதமு நஞ்சமும் போல அணங்கனையாய் தொலையாத வின்பமுந் துன்பமுங் காட்டுவர் தூங்கருவி மலையா சலத்தமிழ் வேர்வாணன் மாறைநம் மன்னவரே.
|
(இ-ள்.) அணங்கனையாய்! ஒலிக்கும் அருவியையுடைய பொதியமலையிற் பிறந்த தமிழை யாராய்ந்த வாணன் மாறைநாட்டு நம் மன்னவர், முலைபொருந்திய புணர்ச்சியினும் பிரிவினும், பெருமைபொருந்திய முந்நீராகிய கடலிடத்துப் பிறந்த அமுதும் நஞ்சும்போலத் தொலைவில்லாத இன்பமும் துன்பமும் காட்டுவாராதலால் இரண்டினும் 1அல்லராயிருந்தார் என்றவாறு. |
ஆர்தல் - பொருந்துதல். அலையார் என்புழி ஆர்தல் - தோன்றுதல். தூங்கருவி - ஒலிக்குமருவி. `வாண்மலைந் தெழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க` என்னுந் தொல்காப்பியச் சூத்திரவுரையாற் காண்க. மலையாசலம் - பொதியமலை. `அமுதமும் நஞ்சமும் போல` என்பதனால், இன்பத்தினும் துன்பம் மிக்கு என்று கூறியவாறாயிற்று. என்னை,
|
| 2`இன்பங் கடன்மற்றுக் காம மஃதடுங்கால் துன்ப மதனிற் பெரிது` |
என்பதானுணர்க. |
(147) |
|
1. (பாடம்) வல்லவராயிருந்தார். |
2. குறள் : படர்மெலிந்திரங்கல் - 6. |