|
|
தலைவியைப் பாங்கி யச்சுறுத்தல் |
தலைவியைப் பாங்கி அச்சுறுத்தல் என்பது, தலைவியைப் பாங்கி அச்சுறுத்திக் கூறுதல்.
|
| 1பேணற் கரியநின் பெண்மையு நாணமும் பேணியவர் காணத் தகுமென்று காண்பதல் லாற்சுழி காதனெஞ்சு பூணத் தருகினும் பொற்பல்ல 1ளாகுதல் கற்பல்லவால் யாணர்த் தமிழுடை யான்வாணன் மாறையின் இன்னமுதே.
|
(இ-ள்.) புதிதாய்ப் புலவர் பாடும் தமிழையெல்லாம் கொள்ளுந் தன்மையையுடைய வாணன் மாறையின் இனிய அமுதம் போன்றவளே! மிகுந்த காதலை நெஞ்சு பூணத்தருகினும் விரும்பற் கரிதாகிய நின் பெண்மையும் நாணமும் விரும்பியவரே காணத் தகுமென்று கருதுவதல்லாமல், இவ்வாறு துன்பத்தாலழுங்கி அழகல்லளாகுதல் கற்பல்ல என்றவாறு. |
பேணற்கரிய நின் பெண்மை - தவஞ்செய்து விரும்பினும் எய்தற்கரிய பெண் தன்மை. பேணி - விரும்பி. தேற்றேகாரம் விகாரத்தாற் றொக்கது. காண்பது - கருதுவது. பொற்பு - அழகு. யாணர் - புதுமை.
|
என்பதனால் யாது கூறியதெனின், துன்பமுறவே அத் துன்பத்தால் நலனழியும், நலனழியவே அன்னைக்கு ஐயந்தோறும்; தோன்றவே இற்செறிப்பு வரும். வேற்றுவரைவு நேரினும் நேரும். ஆதலான், கற்புக் கெடுமென்று அச்சமுறுத்திக் கூறியவாறாயிற்று. |
(148) |
நீங்கற்கருமை தலைவி நினைந்திரங்கல்: |
நீங்கற்கு அருமை தலைவி நினைந்து இரங்கல் என்பது, தலைவன் விட்டு நீங்கற்கு அருமையைத் தலைவி நினைந்து தன்னுள் இரங்கிக் கூறல்.
|
| 2குன்றா கியபொன்னும் வேழக் குழாமுங் கொடைபுகழ்ந்து சென்றார் முகக்குஞ் செழுந்தஞ்சை வாணன்தென் மாறைவெற்பில் நன்றா மிறைவற்கு நன்றியி 2லேற்குமுன் நான்முகத்தோன் ஒன்றா விதித்தில கேயுயிர் போல உடம்பையுமே.
|
(இ-ள்.) நெஞ்சமே! பொன்னாகிய மலையையும் யானைத் திரளையும் கொடையைப் புகழ்ந்து சென்றோர்கள் பரிசிலாய்க் கொள்ளப்பட்ட செழுமையையுடைய தஞ்சைவாணனது தென்மறைநாட்டு வெற்பிடத்து,
|
|
1. (பாடம்) வாகுதல். |
2. (பாடம்) லேற்குமந் நான் முகத்தோன். |