|
|
வேங்கை பூக்குங்காலம் தினைக்கதிர் கொய்யுங் காலமாதலால், வேங்கை கட்டுரையால் தினைக்கதிர் கொய்கின்றார் என்று கூறியது.
|
| 1`வாராக் காலத்த நிகழுங் காலத்தும்` |
என்னுஞ் சூத்திரவிதியால் கொய்கின்றார் என்னும் நிகழ்காலச் சொல்லைக், `கொய்தார்` என விரைவுபற்றி இரந்தகாலத்தாற் கூறினாரென வுணர்க. முன், `இறைவனைக் குறிவரல் விலக்கல்` செய்யுளில் 2`புனமும் பகந்தினைச் செங்குர லேந்தும்` என்று கூறியதனானும், `கொய்கின்றார்` என்றே கொள்க.
|
கூனல் - தலைவளைதல். குரல் - கதிர். ஏனல் - தினை. `சோலையில் அழகிய மணத்தோடுங் கூடிய மலரிலிருக்குங் கள் வாயினிடத்து நாறுங் கரிய நிறத்தையுடைய கணிக்காரிகை கட்டுரையால்` எனினும் அமையும், கணிக்காரிகையைக் கேட்டுத் தினைகொய்தல் அவர்க்கியல்பாகலின். |
(153) |
பாங்கி முன்னின் றுணர்த்தி யோம்படை சாற்றல்: |
பாங்கி முன்னின்று உணர்த்தி ஓம்படை சாற்றல் என்பது, அவ்வாறு முன்னின்று உணர்த்திய பாங்கி எம்மை மறவாமை வேண்டுமென்று கூறுதல்.
|
| கனஞ்சாய நல்கிய கையுடைய யானெதிர் கன்றினர்தம் மனஞ்சாய வென்றருள் வாணன் வரோதயன் மாறைவெற்பில் சினஞ்சாலும் வேலண்ண லேமறவே லெம்மைச் செவ்வியிரு தனஞ்சா யினுமினி நின்னையல் லாதில்லைத் தாழ்குழற்கே.
|
(இ-ள்.) கொடையில் மேகஞ்சாயக் கொடுக்கப்பட்ட கையை யுடையவன் வீரத்தா லெதிராகிச் சினந்தவர் மனஞ்சாய வென்றருளிய வரோதயனாகிய வாணனது மாறை வெற்பில் கோபமையும் வேலையுடைய தலைவனே! அழகையுடைய இரு தனம் சாயினும் இனித் தாழ்ந்த குழலையுடையாட்குப் பற்றுக்கோடு நின்னையல்ல தில்லையாதலால் எங்களை மறவேல் என்றவாறு. |
கனம் - மேகம். சாய்தல் - நிலைதளர்தல். நல்கல் - கொடுத்தல். மனஞ்சாய - செவ்விதி னில்லாது வளைய சினஞ்சாலும் - சினம் நிறையும். செவ்வி - அழகு. தனஞ்சாய்தல் - முலைசரிதல். `தனஞ் சாயினும்` என்று இங்ஙனங் கூறுதல், எடுத்துக்கோடற் கண்ணே எஞ்ஞான்றும் ஒரு தன்மையர் என்று கூறியதனோடு மாறு கொள்ளும் எனின், மாறுகொள்ளாது, என்னை, |
|
1. தொல். சொல். வினையியல் - 44. |
2. தஞ்சைவா - 156. |