|
|
தன்னாட் டணியியல் பாங்கி சாற்றல்: |
| வகைகொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின்முந்தம் தகைகொண்ட சந்தனச் சாந்தணிந் தாடுவர் தஞ்சையர்கோன் மிகைகொண்ட தெவ்வரை வெந்கண்ட வாணன்வெற் பாவெமதூர் நகைகொண்ட வல்லியன் னாரெல்லி நாக நறுநிழலே.
|
(இ-ள்.) குற்றங்கண்ட தெவ்வரைப் புறங்கண்ட தஞ்சையர் கோனாகிய வாணன் வெற்பனே! எமது ஊரிடத்து மகிழ்ச்சி கொண்ட வல்லிபோல்வார், வகைகொண்ட மாந்தழை, காந்தளம் போது, யானைக்கோட்டு முத்தம், அழகுகொண்ட சந்தனச் சாந்து இவையணிந்து கங்குற் காலத்துப் புன்னாகத்தின் நறிய நிழலில் விளையாடுபவர் என்றவாறு.
|
எனவே குறியிடங் கூறயவாறாயிற்று. இரவுக்குறியிடம் மனையைச் சுற்றி வளைந்த மதிலகத்தென்று உணர்க.
|
`மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட தஞ்சையர் கோனாகிய வாணன்` என முடிக்க. `நிழலிலாடுவர்` என இயையும். `வகைகொண்ட` என்பதனைப் `பொது` முதலியவற்றிற்குங் கூட்டுக.
|
வகை கொள்ளலாவது தழைவகையிற் கொண்ட மாந்தழையும், போதுவகையிற் காந்தட் போதும், முத்தவகையிற் கொண்ட யானைக்கோட்டு முத்தமும், சந்தனவகையிற் கொண்ட தகை கொண்ட சந்தனமும் என்று உணர்க. |
தகை - அழகு. மிகை - குற்றம். வெந் - புறம். நகை - மகிழ்ச்சி. எல்லி - இரா. உடுப்பதற்கும், சூடுவதற்கும், பூண்பதற்கும், `அணிந்து` என்னுஞ்சொல் பொதுவாகலான் அச் சொற் கொண்டு ஒரு முடிபாக்கிக் கூறியவாறு உணர்க. |
(168) |
இறைவிக் கிறையோன் குறை யறிவுறுத்தல்: |
இறைவிக்கு இறையோன் குறை அறிவுறுத்தல் என்பது, பாங்கி தலைவனை ஓரிடத்து நிறுவித் தலைவிபக்கற் சென்று தலைமகன் குறையை யறிவித்தல்.
|
| புயலே றதிர்தொறும் பொங்குளை மீதெழப் போதகந்தேர்ந் தியலே றதிரு மிருங்கங்குல் வாய்முத்த மீன்றுசங்கம் வயலே றணைவள ருந்தஞ்சை வாணன் வரையிலுண்கண் கயலே றனையநின் பால்வரல் வேண்டினர் காதலரே.
|
(இ-ள்.) இடி யதிருந்தொறும் மிகுந்த மயிரைச் சிலிர்த்து யானையைத்தேடி யியங்குஞ் சிங்கவேறு வாய்விடும் பெரிய |