கட
159
இரவுக்குறி

 
தன்னாட் டணியியல் பாங்கி சாற்றல்:
  வகைகொண்ட மாந்தழை காந்தளம் போது மருப்பின்முந்தம்
தகைகொண்ட சந்தனச் சாந்தணிந் தாடுவர் தஞ்சையர்கோன்
மிகைகொண்ட தெவ்வரை வெந்கண்ட வாணன்வெற் பாவெமதூர்
நகைகொண்ட வல்லியன் னாரெல்லி நாக நறுநிழலே.

     (இ-ள்.) குற்றங்கண்ட  தெவ்வரைப்  புறங்கண்ட  தஞ்சையர்   கோனாகிய
வாணன்  வெற்பனே!  எமது  ஊரிடத்து  மகிழ்ச்சி  கொண்ட   வல்லிபோல்வார்,
வகைகொண்ட  மாந்தழை,   காந்தளம்    போது,    யானைக்கோட்டு   முத்தம்,
அழகுகொண்ட சந்தனச் சாந்து இவையணிந்து  கங்குற்  காலத்துப்  புன்னாகத்தின்
நறிய நிழலில் விளையாடுபவர் என்றவாறு.

     எனவே  குறியிடங்  கூறயவாறாயிற்று.  இரவுக்குறியிடம்  மனையைச் சுற்றி
வளைந்த மதிலகத்தென்று உணர்க.

     `மிகை கொண்ட தெவ்வரை வெந் கண்ட தஞ்சையர்  கோனாகிய  வாணன்`
என முடிக்க. `நிழலிலாடுவர்` என இயையும். `வகைகொண்ட` என்பதனைப் `பொது`
முதலியவற்றிற்குங் கூட்டுக.

     வகை    கொள்ளலாவது    தழைவகையிற்    கொண்ட    மாந்தழையும்,
போதுவகையிற்  காந்தட்  போதும்,  முத்தவகையிற்  கொண்ட   யானைக்கோட்டு
முத்தமும், சந்தனவகையிற் கொண்ட தகை கொண்ட சந்தனமும் என்று உணர்க.

     தகை - அழகு.    மிகை - குற்றம்.    வெந் - புறம்.    நகை - மகிழ்ச்சி.
எல்லி - இரா. உடுப்பதற்கும்,    சூடுவதற்கும்,     பூண்பதற்கும்,     `அணிந்து`
என்னுஞ்சொல்   பொதுவாகலான்   அச் சொற்   கொண்டு   ஒரு  முடிபாக்கிக்
கூறியவாறு உணர்க.
(168)    
இறைவிக் கிறையோன் குறை யறிவுறுத்தல்:
     இறைவிக்கு இறையோன் குறை அறிவுறுத்தல் என்பது,  பாங்கி  தலைவனை
ஓரிடத்து நிறுவித் தலைவிபக்கற் சென்று தலைமகன் குறையை யறிவித்தல்.

  புயலே றதிர்தொறும் பொங்குளை மீதெழப் போதகந்தேர்ந்
தியலே றதிரு மிருங்கங்குல் வாய்முத்த மீன்றுசங்கம்
வயலே றணைவள ருந்தஞ்சை வாணன் வரையிலுண்கண்
கயலே றனையநின் பால்வரல் வேண்டினர் காதலரே.

      (இ-ள்.) இடி யதிருந்தொறும் மிகுந்த மயிரைச் சிலிர்த்து  யானையைத்தேடி
யியங்குஞ் சிங்கவேறு வாய்விடும் பெரிய