கட
161
இரவுக்குறி

 
     (இ-ள்.) வெவ்விய  கூட்டமாகிய  யானைகளை  இரப்போர்க்குக் கொடுத்துப்
பகைவேந்தர்தங்    குலத்தினுள்ளோர்  வாழ்வெல்லாந்   தவிர்த்தருள்   வாணன்
தமிழ்ச்சிலம்பிடத்து வண்டுகட்குக் களிப்பைக் கொடுத்த மணம் வாடாத மலர்சூழ்ந்த
குழலாய்! காதலர் இரவுக் குறியைக் காதலித்தாராயின் யான் மறுவார்த்தை கூறுவது
என் என்றவாறு.

     எனவே, நேர்ந்தமை யாயிற்று.

குலம் - கூட்டம்.   தமிழ்ச்சிலம்பு - பொதியமலை.    களி - களிப்பு. `களிபயந்த
கொங்கு`  என்றதனால் வண்டு  வருவித்து உரைக்கப்பட்டது.   கொங்கு - மணம்.
உலவா - வாடா.
(171)    
நேர்ந்தமை பாங்கி நெடுந்தகைக் குரைத்தல்:
  பரவாத வண்ணம் பரவியும் பாதம் பணிந்துநெஞ்சம்
கரவாத பொன்னைநின் காரண மாகக் கயிலையென்றே
வரவா தவனஞ்சும் வெண்மா விகைத்தஞ்சை வாணன்வெற்பா
இரவாத வண்ணமெல் லாயிரந் தேனிவ் விரவிடையே.

     (இ-ள்.) வெண்சாந்து பூசியவதனாற் கயிலாயமலையென்று கதிரோன் வருதற்
கஞ்சும் மாளிகையுடைய  தஞ்சைவாணன்  வெற்பனே! நெஞ்சத்தில் நின் காதலை
மறையாத பொன்னை நின் பொருட்டாகப்  புகழாத  வண்ணமெல்லாம் புகழ்ந்தும்.
பாதங்களைப்   பலகாற்   பணிந்தும்,   இவ்விடையிருளின்கண்   அவள்  மனம்
இயைதற்கு இரவாத முறைமையெல்லாம் இரந்தேன் என்றவாறு.

     பரவுதல் - புகழ்தல். கரத்தல் - மறைத்தல். பொன் - திருமகள். ஆதவன் -
கதிரோன். வண்ணம் இரண்டும் முறைமை.
(172)    
குறியிடை நிறீஇத் தாய்துயி லறிதல்:
     குறியிடை  நிறீஇத்  தாய்துயில்  அறிதல்  என்பது,  பாங்கி  தலைவனைக்
குறியிடத்து நிறுத்தித் தாயினது துயிலை யறிதல்.

  மாகந் தரியலர்க் கீந்தருள் வாணன்தென் மாறைவெற்பில்
மேகந் தருமின் னிடையன்ன மேவிரை நாண்மலர்வேய்
நாகந் தழுவுங் குடம்பையின் வாய்நடு நாளிரவில்
சோகந் தவர்வில வாய்த்துயி லாததென் தோகைகளே.


     (இ-ள்.) தன்னைச் சேராத பகைவர்க்கு வானுலகத்தை அளித்தருள் வாணன்
தென்மாறை   வெற்பிடத்து  மேகங்கொடுக்கும்  மின்போன்ற   இடையையுடைய
அன்னமே!     மணநாண்மலர்     பொருந்திய    புன்னாகத்தைத்     தழுவுங்
குடம்பையிடத்தில்  இரவில்  இடையாமத்து  மயில்கள்  துன்பத்தை  நீங்காவாய்த்
துயிலாதது என் என்றவாறு.