|
|
மாகம் - வானுலகு. தரியலர் - பகைவர். குடம்பை - கூடு. வேய்தல் - பொருந்துதல். சோகம் - துன்பம். தோகை - மயில். |
(173) |
இறைவிக் கிறைவன் வரவறி வுறுத்தல்: |
| கந்தார நாணுங் கனிந்தசொல் லாய்நங் கடிமனைக்கே வந்தார் அவாவின் பெருமையி னாற்றஞ்சை வாணன்வெற்பில் கொந்தா ரசோகந் தருஞ்செழும் போதுங் கொழுந்தழையும் தந்தா ரகலந் தழீஇயக லாது தணந்தவரே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பில் கந்தாரம் நாணும் தித்தித்த சொல்லாய்! கொத்தார்ந்த அசாகத்தரு தரப்பட்ட செழும் போதும் கொழுந்தழையும் தந்து நிறைந்த முலையைத் தழீஇ மனத்தாற் பிரியாது மெய்யாற் பிரிந்த, ஆதரங்கொண்ட அவாவின் பெருமை யினால், நமது விளங்கிய மனைக்கு வந்தார் என்றவாறு. |
கந்தாரம் - ஒரு பண். கனிதல் - தித்தித்தல். கடி - விளக்கம். கொந்து - கொத்து. அகலம்: ஆகுபெயர். தணத்தல் - பிரிதல். |
(174) |
தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசேறல்: |
| மின்னே யயிலொடு மின்விளக் காவந்த வெற்பரைநாம் பொன்னே யெதிர்கொளப் போதுகம் வாபுவி யேழினுக்கும் தன்னேயம் வைத்தருள் சந்திர வாணன் தமிழ்ச்சிலம்பில் நின்னே ரியன்மயில் கண்டுயில் நாக நிழலகத்தே.
|
(இ-ள்.) ஏழ்புவிக்கும் தன் அன்பை வைத்தாளப்பட்ட சந்திர வாணன் தமிழச்சிலம்பி லிருக்கப்பட்ட பொன் போன்றவளே! நின் இயலுக்கு நேராகிய மயில் கண்ணுறங்கும் புன்னாக நிழலகத்து ஒளிபொருந்திய வேலுடனே மின்னும் விளக்காகக் கங்குலில் வந்த வெற்பரை நாம் எதிர்கொள்ளப் போதுகம் வா என்றவாறு. |
மின் - ஒளி. ஏய்தல் - பொருந்துதல். அயில் - வேல். பொன் : ஆகுபெயர். நேயம் - அன்பு. தமிழ்ச்சிலம்பு - பொதியமலை. இயல் - சாயல். `நின் இயல்` என மாறுக. |
(175) |
குறியுய்த் தகறல்: |
குறி உய்த்து அகறல் என்பது, பாங்கி தலைமகளைக் குறியிடத்துச் செலுத்தித் தான் அகன்றுபோதல். |
| மந்தார மன்னகை வாணன்ததென் மாறை மயிலனையாய் நந்தா வனப்பொய்கை நான்கொய்கு வேன்குழ னாணுங்கங்குல் கொந்தார் தெரியனின் செங்கனி வாயொடுங் கொங்கையொடும் பைந்தா மரையையுஞ் சேதாம் பலையும் பகைப்பித்ததே. |