|
|
எனவே, நாம் கருதாத அடையாளத்தை நமக்கறிவித்துத் தாம் அக்குறி வாராதொழிந்தாரென்று தலைவன் தீங்கு கூறியவாறென்று உணர்க.
|
வடி - மாவடு. அடையலர் - பகைவர். தொடி - வளை. பணை - மூங்கில். குறித்தல் - கருதுதல். |
(192) |
தலைவன் புலந்து போதல்: |
தலைவன் புலந்து போதல் என்பது, தலைவன் தான் குறித்த குறியிலிருந்து தலைவி அல்லகுறிப்பட்டு வாராமையாற் புலந்து தன் ஊர்க்குப் போதல்.
|
| தேனுற்ற வாகையந் தார்த்தஞ்சை வாணனைச் சேரலர்போல் மானுற்ற பார்வை மயில்பொருட் டாக வழிதெரியாக் கானுற்ற கானற் கனையிருள் வாய்வரக் கற்பித்தநீ யானுற்ற நோய்களெல் லாம்படு வாயினி யென்னெஞ்சமே.
|
(இ-ள்.) எனது நெஞ்சமே! தேன்பொருந்திய வாகையந்தா ரணிந்த தஞ்சைவாணனைச் சேராதவர்கள் போல, மான்போலுற்ற பார்வையினையுடைய மயில் பொருட்டாக வழி தெரியாத காடு போலப் பொருந்திய சோலையிடத்திற் செறிந்த இருளிலே வரக் கற்பித்த நீ யான் உற்ற நோய்களெல்லாம் இன்று படுவாயாக என்றவாறு.
|
வாகையந்தார் - வெற்றிமாலை. சேரலர் - பகைவர். `மானுற்ற பார்வை` `கானுற்ற கானல்` இரண்டும் உவம வாசகம். ஈங்கு, `உற்ற` என்பதற்கு `வம்பறா வென்று செப்புற்ற தோர்பகை` என்பதனை உதாரணங் காட்டுவாரும் உளர். மயில் : ஆகுபெயர். கானல் - சோலை. கனையிருள் - செறிந்தவிருள்.
|
இவ்வாறு புலந்துபோம் தலைவன் தான் வந்து குறியிடத்து நின்றுபோயதற்கு அடையாளமாகத் தன் மாலையைத் தாழை மேல வைத்துப் போயினான் என்பது மேல்வருஞ் செய்யுளிற் றோற்றிய தென்பது. |
(193) |
இத்துணையும் எட்டாநாட் செய்தியென் றுணர்க. |
புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண் டிரங்கல்: |
புலர்ந்தபின் வறுங்களந் தலைவிகண்டு இரங்கல் என்பது, ஒன்பதா நாள் இருள்புலர்ந்த பின் தலைவி வறுங்களங் கண்டு இரங்கல்.
|
| தாதகை தண்டலை சூழ்தஞ்சை வாணன் தடந்துறைவாய் நீதகை கொண்டென்முன் னின்றனை யேசெந் நிறக்கனிவாய் மேதகு முள்ளெயிற் றொண்முகைக் கொங்கைவெண் தோட்டு மென்பூம் கேதகை யென்னுநல் லாய்கொண்கர் மாலை கிடைத்ததென்றே.
|
(இ-ள்.) இடி யதிருந்தொறும் மிகுந்த மயிரைச் சிலிர்த்து யானையைத்தேடி யியங்குஞ் சிங்கவேறு வாய்விடும் பெரிய |