கட
தஞ்சைவாணன் கோவை
176

 
    (இ-ள்.) பெருந்திருமாது  தாமரை  மலரை  நீக்கினவளாகி  இந்தப்  பழைய
மலைமேல்    வந்துபிற்நதன    ளாகுமென்று    உலகஞ்சொல்லப்   பெண்களிற்
சிறந்தனளாதலின், செந்தமிழ் வாணன் தென்மாறை போன்றவள் மறந்தனளாயினும்,
யாம் ஒருபோதும் மறந்திலம் என்றவாறு.

    அம்போருகம் - தாமரை. வரை - மலை. என - என்று சொல்ல பேதையர் -
பெண்கள். போது - நாள்.
(198)    
அவள் குறிமருண்டமை யவளவற் கியம்பல்:
     அவள்  குறிமருண்டமை  அவள்  அவற்கு  இயம்பல்  என்பது   தலைவி
குறிமயங்கியது பாங்கி தலைவற்கு உணர்த்தல்.

  தனையா வரும்புக ழத்தரும் வாணன் தமிழ்த்தஞ்சைமான்
அனையா ளவள்குறி யாமிதென் றேநினைந் தல்லதொன்று
நினையா வருங்கங்குல் நின்குறி யாவந்து நின்றதுநம்
விளையால் விளைந்ததென் றேவெறி தேயன்ப மீண்டனளே.
     (இ-ள்.) அன்பனே!   தன்னை   யாவரும்   புகழக்கொடுக்கும்    வாணன்
தமிழ்த்தஞ்சை  மான்போன்றவளாகிய  அத்தலைவி இது குறியாமென்று  நினைந்து
வருங்கங்குலிடத்து  நீ  நினையாவல்ல  தொருகுறி  நின்குறியாய்  வந்த  நேர்பட
நின்றது, நாம்  முன்செய்த தீவினையால்  விளைந்ததென்று பயனன்றி  மீண்டனள
்என்றவாறு.

     `இதுகுறியாம்` எனவும், `நினைந்து வருங் கங்குல்` எனவும் `நினையா வல்ல
தொன்று` எனவும் மாறுக. கங்குல் - இரா. வெறிதே - பயனின்றியே. அன்ப
என்பது அண்மை விளி.
(199)    
அவன்மொழிக் கொடுமைசென் றவளவட் கியம்பல்:
     அவன்மொழிக்   கொடுமைசென்று  அவள்  அவட்கு  இயம்பல்  என்பது,
தலைவன் சொல்லிய கொடுமையைத் தோழி தலைமகட்குச் சொல்லல்.

  பல்லியம் போலுரு மேறெங்கும் ஆர்ப்பதும் பார்ப்பதின்றி
வல்லியம் பேர்தகம் போர்பயில் கான்வந்து வாணன்தஞ்சை
அல்லியம் பொருகை யன்னநின் கேளரு ளாசையினின்
றெல்லியம் போதுசென் றேனென்று கேள்வர் இயம்பினரே.


     (இ-ள்.) போர்புரிவோர் முரசுபோல் இடியெவ்விடத்தும்  ஆரவாரிப்பதையுங்
கருதுதலின்றிப்  புலியும்  யானையும்  போர்  நெருங்கிச் செய்யுங்  காட்டில்வந்து,
வாணன்    தஞ்சை    நகரிலுள்ளவர்    அகவிதழையுடைய   அம்போருகத்தை
யுடையவளாகிய திருமகளையொத்த நினது உறவுதரும்