கட
தஞ்சைவாணன் கோவை
178

 
வருந்தொழிற்கருமை
தாய் துஞ்சாமை:
  ஆழிய கன்புவி யுள்ளன யாவு மடங்கிநள்ளென்
றூழிமு டிந்தன வோங்கிருள் யாமத்து மோடையினும்
தாழியி னும்போ தலர்தஞ்சை வாணன் தரியலர்போல்
தோழிநம் மன்னைகண் ணேதுயில் கோடல் துறந்தனவே.

    (இ-ள்.) தோழியே!  கடல்சூழ்ந்து  அகன்ற  புவியிலுள்ளன  யாவும் அடங்கி
நள்ளென்னும்  ஒசையோடே  கூடி யுகமுடிவு  காலம்போன்று இருள் வளரப்பட்ட
யாமத்தும்  ஓடையிடத்தும்  தாழியிடத்தும்  போதுகள்  அலருந்  தஞ்சைவாணன்
தரியலர் போல் நம் அன்னை கண்டுயில்  கொள்ளுதலைத் துறந்தனள் என்றவாறு.

    ஆழி - கடல்.  நள்ளென்னு  மோசை - அனுகரணவோசை   ஊழி - யாகம்.
யாமம் - இரவு. தாழி - சால்.
(202)    
நாய் துஞ்சாமை:
     நாய் துஞ்சாமை என்பது,  தாய்துஞ்சியபின் ஊரிலிருக்கும் நாய் துஞ்சாமை.

  தண்ணென் புனல்வையை சூழ்தஞ்சை வாணன் தரியலர்போல்
பெண்ணென் பிறவியும் பேருடைத் தன்றிப் பெரும்பதிநங்
கண்ணென் பவர்வரக் கங்குலின் ஞானிக் கணங்குரைத்துத்
துண்ணென் கடுங்குரல் வாயன்னை துஞ்சிலும் துங்கிலவே.

     (இ-ள்.) குளிரென்னும்  புனலையுடைய  வைகை  சூழ்ந்த  தஞ்சைவாணன்
தரியலர்போல்    பெண்ணென்று   சொல்லும்   பிறவியும்   கீர்த்தியுடைத்தன்று;
இப்பெலுடதபதியிடத்து  நம் கண்ணென்று  சொல்லப்பட்ட தலைவர்கங்குலில்  வர
நம் அன்னை துஞ்சினும், துண் என்று சொல்லும் கடிய குரலெழும்  வாயையுடைய
ஞாளிக்கூட்டங் குரைத்துத் துஞ்சில என்றவாறு.

     பாங்கி:   முன்னிலை   யெச்சம்.    தரியலர் - பகைவர்.   பேர் - கீர்த்தி.
பெரும்பதி.     என்புழி    ஏழனுருபுதொக்கது.    ஞாளிக்கணம் - நாய்க்கூட்டம்.
`துண்ணென்  கடுங்குரல்வாய்  ஞாளிக்கணம்`  என  இயையும்.   துண்   என்பது
அச்சக்குறிப்பு.    துஞ்சினும்    என்னும்    உம்மை,  துஞ்சுதல்   அரிதென்பது
தோன்றநின்றது.
(203)