|
|
ஊர் துஞ்சாமை: |
ஊர் துஞ்சாமை என்பது, நாய் துஞ்சினும், ஊரிலுள்ளார் துஞ்சாதிருத்தல்; இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்து மேல்நின்றது.
|
| ஒங்கண்ணல் வெம்பக 1டுந்திவந் தோரை உடன்றுதுபைத் தேங்கண்ணி சூடிச் செருவென்ற வாணன்தென் மாறைமின்னே தாங்கண் ணனையர் தமைப்பிரிந் தோநந் தனிமைகண்டோ நாங்கண் ணுறங்கினு மோவுறங்2கார்கண் நகரவரே. |
(இ-ள்.) உயர்ந்த பெருமையுடைய வெவ்விய யானைப் பகட்டை நடத்திவந்த பகைவரைச் சினந்து, தும்பையென்னுந் தேன்பொருந்திய மாலையைச் சூடிப் போரைவென்ற வாணன் தென்மாறை நாட்டு மின்போன்றவளே! தாம் கண்போன்ற நாயகரைப் பிரிந்தோ, அன்றி நமது தனிமை கண்டோ, நாம் கண்ணுறங்கினும் கண்ணுறங்கார் நகரவர் என்றவாறு.
|
அண்ணல் - பெருமை. பகடு - யானை. உந்தல் - நடத்துதல். உடலுதல் - சினத்தல். போர் பொருவோர் தும்பைமாலை சூடுதல் புறப்பொரு ளிலக்கண வழக்கு. தேங்கண்ணி - தேன்பொருந்திய மாலை. செரு - போர். |
(204) |
காவலர் கடுகுதல்: |
காவலர் கடுகுதல் என்பது, நகர்காப்போர் துடியடித்துக் கொண்டு ஊர்சுற்றிக் கடுகி வருதல்.
|
| புயற்கண் ணியதலைப் பூகமென் பாளைப் புதுமதுநீர் வயற்கண் ணிறைதஞ்சை வாணன்தென் மாறையில் வஞ்சியன்னாள் கயற்கண் ணிணையஞ்சி நீர்மல்கக் காவலர் கைப்பறையின் செயற்கண் ணிணையல்ல வோபடு கின்றன திண்கடிப்பே.
|
(இ-ள்.) முகிலைக்கிட்டிய தலையினையுடைய பூத்தினது மெல்லிய பாளைப் புதிய மதுநீர் வயற்கண் நிறையுந் தஞ்சை வாணன் தென்மாறையில் வஞ்சிக் கொம்புபோல் வாளது கயல் போன்ற கண்ணினை யஞ்சி நீர் நிறையவல்லவோ காவலரது கைப்பறையின் செயல் பொருந்திய கண்ணினையின் திண்ணிய கடிப்புப் படுகின்றன என்றவாறு.
|
அண்ணிய - கிட்டிய. தலை - கமுகினது உச்சி. பூகம் - கமுகு. பறை - துடி. கண்ணினை - இருபக்கம். கடிப்பு - அடிக்குங் குறுங்கோல். ஓகாரம்: எதிர்மறை. |
|
(பாடம்). 1. டூர்ந்துவந்தா. 2. காரிந் நகரவரே. |