கட
தஞ்சைவாணன் கோவை
180

 
உரைப்போர் கேட்போர் இன்மையின் கவிக்கூற்றாய துறை:  `வருந்தொழிற்கருமை`
கூறுங்  கிளவி  ஏழினுள்ளும்  ஆறு  கிளவியும்  தலைவி  கூற்றாய்க்கூறி,  `இது
கவிக்கூற்றாய்க்     கூறியது   என்னையெனின்,   அயன்மாக்கள்   தன்மையைக்
கற்புடைமகளிர் கூறுவது இயல்பன்றாகலின், அவர் கூறாரென்னும் ஒழுக்கம் பற்றிக்
கவிக்கூற்றாக் கூறியதென் றுணர்க. இக்கருத்தா னன்றே, `ஊர் துஞ்சாமை` என்னுங்
கிழவிச்  செய்யுளில்,  `தாம் கண்ணனை யர் தமைப்பிரிந்தோர்`  என  ஆடவரை
நீக்கி மடவார் செயலாய்க் கூறியதூஉம் என்றுணர்க.

  1`அடிக்கண் ணதிருங் கழலரி கேசரி தெவ்வனுங்கக்
கொடிக்கண் ணிடியுரு மேந்திய தென்னவன் கூடலன்னாய்!
வடிக்கண் ணிரண்டும் வளநகர் காக்கும்வை வேலிளைஞர்
துடிக்கண் ணிரண்டுங்கங் குற்றலையொன்றுந் துயின்றிலவே`

    என இறையனார் அகப்பொருள் உரையிற் காட்டியவதனானும் உணர்க.
(205)    
நிலவு வெளிப்படுதல்:
     நிலவு  வெளிப்படுதல்  என்பது,  தலைவன்  வருதற்கு  இடையூறாய் நிலவு
வெளிப்படுதல்.

  தெண்பாற் கதிர்மூத்த வெண்ணகை யாய்திகி ரிக்கிரிசூழ்
மண்பாற் புகழ்வைத்த வாணன்தென் மாறைநம் மன்னர்பொற்றேர்
பண்பாற் பரிக்கும் பரிவரு மாறென் பரந்தநிலா
வெண்பாற் கடலின்வை யம்பதி னாலு மிதக்கின்றவே.

     (இ-ள்.) தெளிவாய்ப்   பால்போன்ற   கதிரையுடைய   முத்தம்   போன்ற
வெள்ளிய  நகையையுடையாய்!  பரந்த  நிலவாகிய  வெண்பாற்கடலின்   உலகம
பதினாலு  மிதவா நின்றன; ஆதலாற் சக்கரவாளகிரி சூழ்ந்த புவியிடத்துப்  புகழை
வைத்த  வாணன்  தென்மாறை  நாட்டிலிருக்கும்  நம்  மன்னரது  பொற்றேரைக
்குணத்தினாற் பரிக்கும் பரிகள் வருமாறு எப்படி? என்றவாறு.

     திகிரிக்கிரி - சக்கர வாளம்.    பண்பு - குணம்.      பரித்தல் - சுமத்தல்.
பரி - குதிரை.  வையம் என்பது தேர்க்கும் பேராதலின்,  முன் பதினாலு தேர்மீது
நின்றன  கண்டு  நம்மன்னர்  பொற்றேர்  பரிக்கும் பரி வருமாறு என் என  ஒரு
பொருள் தோன்றியது காண்க.

     நிலவு   வெளிப்படுதல்   பதினாலு  நாழிகைக்குமேற்  கூறுவதென்னெனின்
மதித்திங்களும்  பிறைத்திங்களும்  தம்மிற்  கலக்கின்ற  நாள்   அப்பதினைந்தில்
இதுமதித்திங்களாதலால் இம்மதித்திங்கட்கு முற்கூறும் பிறைத்திங்கட்குப்

1. இறையனார் அகப்பொருள் - 30.