கட
181
இரவுக்குறி இடையீடு

 
பிற்கூறும்  களவில்  இரவுக்  குறிக்கு  உரித்தாகலானும்  மற்றைத்தினம் அட்டமிப்
பக்கமாகலானும் என்று உணர்க.

  1`திங்க ளிரண்டி னகமென மொழிப`

     என்னும் இறையனார் அகப்பொருட் சூத்திர வுரையா னுணர்க.
(206)    
கூகைகுழறுதல்:
     கூகை குழறுதல் என்பது,  கூகை குழறக் கேட்ட தலைவி அஞ்சிக் கூறுதல்.

  நம்பே றுடைமை யிருக்கின்ற வாகடல் ஞாலத்துள்ளோர்
தம்பே றெனவந்த சந்திர வாணன் தரியலர்போல்
வம்பேறு கொங்கை மயிலிய னாமஞ்ச மன்றமராங்
கொம்பேறி நள்ளிருள் வாய்க்குழ றாநின்ற கூகைகளே.

     (இ-ள்.) கச்சேறி   யிருக்கப்பட்ட  கொங்கையையுடைய  மயில்   போன்ற
இயலையுடையாய்!   கடல்சூழ்ந்த  வுலகத்துள்ளோர்  தம்   தவப்பேறாய்   வந்த
சந்திரவாணன்    தரியலர்போல    நாம்   அஞ்சத்தக்கதாக   வெளியிலிருக்கும்
மராமரத்தின் கினையிலேறி இடையிருளின்கண்ணே கூகைகள் குழறாநின்றன; நமது
நல்வினைப்பேறு இருக்கின்றவாறு நன்றாயிருந்தது என்றவாறு.

     பேறு இரண்டும்,   நல்வினைப்பேறு.   வம்பு - கச்சு.    மன்றம் - வெளி.
நள்ளிருள் - இடையாமம்.      `நன்றாயிருந்தது`       என்னுஞ்        சொல்
வருவித்துரைக்கப்பட்டது.      குறிப்புமொழியதனாற்       றீதாயிருந்தவென்பது
பெறப்பட்டது. மயிலியல் : அன்மொழித்  தொகை; அண்மைவிளி. மராங்கொம்பு - ஆச்சாக்கொம்பு.
(207)    
கோழி குரல் காட்டுதல்:
     கோழிகுரல்  காட்டுதல்  என்பது  இருவர்க்கும் இடையூறாய்க் கோழி குரல்
காட்டுதல்.

  மன்பதை யுய்ய வருந்தஞ்சை வாணன்தென் மாறைவெற்பர்
கொன்பதி வேல்வலங் கொண்டுவந் தால்தங்கள் கோனடைந்தான்
என்பதுதேறி யிடையிரு ளூரை யெழுப்பும் வெம்முள்
பொன்பதி தாள்வளை வாய்ச்செய்ய சூட்டுவன் புள்ளினமே.

      (இ-ள்.) மக்கட்பரப்பு  உய்யும்படி  வரும்  தஞ்சைவாணன்   தென்மாறை
வெற்பர் அச்சம் பதிந்த வேலை வலங் கையிற் கொண்டு வந்தால்,
1. இறையனார் அகப்பொருள் - 32.