|
|
(இ-ள்.) அறல்போல் இருள்கூர்ந்து கடைகுழன்று ஆர்ந்த குழலையும் பிறைபோன்ற வாணுதலையும் உடையாய்! கூடாத விரகமும், கழியாத இரவும், நெருங்கிய முலைமேற் கொன்றைப் பூங்கொத்து வைத்தாற்போன்ற பசப்பும், ஒழிந்த துன்பங்களும் இவையெலாம் தஞ்சைவாணன் வெற்பர் அறியாதிருப்பது வேறொன்றும் அல்ல; நம் ஊழ்வினையாதலால் அவர்மேற் குறையின்று என்றவாறு.
|
புணர்தல் - கூடுதல். புணர்தல் - நெருங்குதல். இணர் - பூங்கொத்து; பசப்புப் பொன்னிற மாதலால் கொன்றை என வருவித்தது. வணர் - கடை குழன்றல். உணர்தல் - அறிதல். ஊழ்வினை - பழவினை. |
(214) |
இத்துணையும் பத்தாநாட் செய்தியென் றுணர்க. |
கனவு நலிபுரைத்தல்: |
கனவு நலிபு உரைத்தல் என்பது தலைவன் கனவிற் கூடினானாக. விழித்தபின்பு பொய்யாய்ப்போன துன்பத்தைப் பதினொன்றாநாள் பாங்கியுடன் தலைவி கூறல். |
| இல்லா வருந்துயி லுண்டா யவரும்வந் தெய்திற்கங்குல் பொல்லாத சேவற் கடுங்குர லார்த்துப் புவிபுரக்கும் மல்லார் புயன்தமிழ் வாணன்தென் மாறை மருவலர்போல் அல்லாமை நெஞ்சத் தடுமாற நல்லிடை யாக்கியதே.
|
(இ-ள்.) பிரிவில் இல்லா அருந்துயிலு முண்டாய வரும் வந்தெய்தின், கங்குலில் பொல்லாமையாகிய கோழி, கொடிய குரலை யார்த்துப் புவியைக் காக்கும் மற்றொழிலார்ந்த புயத்தையுடைய தமிழைக் கற்ற வாணன் தென்மாறை நாட்டைச் சேராதார்போல, நன்கல்லாத என் நெஞ்சம் தடுமாற்றமாக நல்ல இடையூறாக்கியது என்றவாறு. |
தலைவன் பிரிந்தகாலை துயில் அரிதாதலால், `இல்லா வருந்துயில்` என்றும், தலைவன் வந்தெய்தல் அரிதாதலால், `அவரும் வந்தெய்தில்` என்றும், இன்பத்தைக் கெடுத்துத் துயிலெழுப்பலால், `பொல்லாத சேவல்` என்றும். மிகுந்த துன்பத்தைக் கொடுத்தலின், `நல்லிடை` என்றும் கூறியவாறு. துயிலும் என்னும் எதிரது தழீஇய எச்சவும்மை விகாரத்தாற் றொக்கது.
|
பாங்கி: முன்னிலையெச்சம். இது, `கனவொடு மயங்கல்` என்னும் மெய்ப்பாடு. |
(215) |