|
|
|
துகிலையுடையாய், யான் வருந்தும் இந்த நோயைத் தலைவர்க்கு இன்று உரைப்பாருண்டாயின் நமக்கு உயிர் எய்தலாம்; சொல்வார்க்குப் பயன் யாதெனில், அவர் தங்களுக்கு நடக்குந் திரையையுடைய கடல் சூழ்ந்த புவியினிடத்தில் வளரும் புகழெய்தலாம் என்றவாறு. |
வரை - பொதியமலை. பால் - இடம். நுரைப்பால்: உம்மைத் தொகை. ஊர்திரை: வினைத்தொகை. திரை: ஆகுபெயர். தரை - நிலவுலகம். நுண்டுகில், 1`குண்டுகனை பூத்த வண்டுபடு கண்ணி: என்றாற்போல, ஒற்றுமை நயம்பற்றி, நுண்ணிய நூலாற் செய்த துகில் என்று கொள்க. |
(217) |
துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல்: |
துன்புறல் பாங்கி சொல்லெனச் சொல்லல் என்பது, யான் துன்புறலைத் தலைவர்க்கு நீ சென்று சொல்லெனத் தலைவி கூறியதற்குத் தலைவியை நோக்கிப் பாங்கி சொல்லல்.
|
| ஒல்லென வேயென் னுறுதுயர் தாமும் உணரும்வண்ணம் சொல்லென நீயிது சொல்லியென் பேறுன் துயரமெல்லாம் வல்லென வேகொண்ட கொங்கையர் வேள்தஞ்சை வாணன்வெற்பில் அல்லென ஆர்கழ லாயறி யாரல்லர் அன்பருமே.
|
(இ-ள்.) விரைவினுள் இது விரைவென்ன என்னுடைய மிக்க துயரைத் தலைவர்தாமும் உணரும் வண்ணம் என்னைச் சொல் லென்று நீ இது சொல்லிப் பெறும் பயன் யாது? சூதென்று சொல்ல ஒப்புமைகொண்ட கொங்கையர்க்கு வேளாகிய தஞ்சைவாணன் வெற்பில் இருளென்று சொல்லப் பொருந்திய குழலினை யுடையாய்; உன் துயரமெல்லாம் அன்பரும் அறியாரல்லர் என்றவாறு. |
ஒல்லெனல்: விரைவின்கண் வந்த சொல். உறுதுயர் - மிக்க துயர். வல் - சூது. அல் - இருள். ஆர்ந்த - பொருந்திய. |
(218) |
அலர்பார்த்துற்ற அச்சக்கிளவி: |
அலர் பார்த்து உற்ற அச்சக்கிளவி என்பது, உற்றாருஞ் சொல்லும் அலரைக் கருதி அதனாலுற்ற அச்சத்தால் தலைமகள் கூறுஞ் சொல்.
|
| மலருந் தொடைவஞ்சி வஞ்சக மாதரு மாரனும்வாய் அலருந் தடங்கை யலருந் தொடாநிற்ப வஞ்சிநெஞ்சம் பலரும் புகழ்தஞ்சை வாணர் பிரானைப் பணியலர்போல் புலரும் பெயருங்கண் ணீர்புல ராது புலரினுமே.
|
|
1. திருமுரு - 199. |