|
|
பிற்கூறும் களவில் இரவுக் குறிக்கு உரித்தாகலானும் மற்றைத்தினம் அட்டமிப் பக்கமாகலானும் என்று உணர்க.
|
என்னும் இறையனார் அகப்பொருட் சூத்திர வுரையா னுணர்க.
|
பகலினுமிரவினும் பயின்றுவரு கென்றல்: |
| குரவுங் கணியும் விரவும்வெற் பாவெய்ய குஞ்சரமேல் வரவுந் தியதெவ்வை மாற்றிய வாணன்தென் மாறைமின்னும் அரவும் பணியும் நுடங்கிடை யாற்றல் ளால்பகலும் இரவுங் குறிவயி னீவரல் வேண்டும் இவள்பொருட்டே.
|
(இ-ள்.) குரவமரமும் வேங்கை மரமும் ஒன்றோடொன்று கலந்திருக்கும் வெற்பை யுடையானே!வெய்ய யானையின்மேல் வரவை நடத்திய பகையை மாற்றிய வாணன் தென்மாறை நாட்டில் மின்னும் அரவும் பணியப்பட்ட ஒசியும் இடையினை யுடையாள் உன்னைப் பிரிந்து ஆற்றலள்; ஆதலால், இவள் பொருட்டுப் பகலினும் இரவினுங் குறியிடத்தில் நீ வரவேண்டும் என்றவாறு.
|
எனவே, ஓரறிவுயிராகிய மரங்களும் பிரியாது ஒன்றோடொன்று கலந்திருக்கின்றமையால், ஆறறிவோடு கூடிய நீ பிரிந்திருக்கத் தகாது என்று உள்ளுறையுவமம் தோன்றியவாறு உணர்க.
|
குரவு - கரா. கணி - வேங்கை. விரவுதல் - கலத்தல். உந்தல் - நடத்தல். நுடங்கல் - ஒசிதல். நுடங்கிடை: அன்மொழித்தொகை. |
(239) |
பகலினு மிரவினும் அகலிவ ணென்றல் : |
| தாவாத செல்வந் தருந்தஞ்சை வாணன் தடஞ்சிலம்பா நீவாரல் சார னிலவல ராம்பக னீடிருளார் மாவா னிலவு நிலமங்கை வார்குழன் மல்லிகைபோல் ஓவா திரவெறிக் குஞ்சோலை நீழலி னூடுவந்தே.
|
(இ-ள்.) தன்னை யடைந்தோர்க்குக் கேடில்லாத செல்வத்தைத் தரும் தஞ்சைவாணனது பெரிய சிலம்பை யுடையானே! பகலில் வரின் விளங்கப்பட்ட அலராம்; இரவில் வரின் நீண்ட இருளார்ந்த பெரிய வானிலவு, நிலமங்கையது குழலின் முடித்த மல்லிகைப் பூப்போல, நீங்காது சோலை நிழலினுள்ளே வந்து எறிக்கும்; ஆதலால், சாரலிடத்து நீ வாரலை என்றவாறு.
|
தாவாத - கெடாத. நிலவுதல் - விளங்குதல். மா - பெருமை. வான் - ஆகாயம். நிலவு - நிலா. ஓவாது - நீங்காது. `பகல் நில வலராம்` எனவும், |