தஞ்சைவாணன் கோவை
204

 
காவல்மிக வுரைத்தல்:
காவல்மிக  வுரைத்தல்  என்பது, குறியிடத்து  நீ வருவதற்கும் அவள் வருவதற்கும்
இடையூறாகிய காவல் மிக்கென்று கூறுதல், மிகவுரைத்தல் -மிகவாயினது உரைத்தல்.

 நஞ்சா ரரவந் திரிதரு கானடு நாளிரவில்
அஞ்சாது செங்கை யயில்விளக் காவணங்-கின்பொருட்டால்
மஞ்சார் மதிற்றஞ்சை வாணன்வெற் பாவரல் வன்சொலன்னை
துஞ்சான் கடுந்துடிக் கைநகர் காவலர் துஞ்சினுமே.

    (இ-ள்.)  முகில்கள்  நிறைந்த   மதில்சூழ்ந்த   தஞ்சைவாணன்     வெற்பில்
உள்ளவனே!  
 நஞ்சு   பொருந்திய பாம்புகள் திரியப்பட்ட காட்டில் இடையாமத்தில்
அச்சமின்றிச்    செங்கையிலேந்திய   வேலே   விளக்காக   அணங்குபோல்வாள்
காரணமாக வாரற்க; அன்றி, நீ குறியிடத்தில் வருதற்கு இடையீடாகிய கொடுமையை
யுடைய துடி  கொட்டித்  
 திரியும் நகர்காவலர் துஞ்சார்; அவர் துஞ்சினும், தலைவி
குறியிடத்தில் வருதற்கு   இடையீடாகிய கடுஞ்சொல்லையுடைய அன்னை துஞ்சாள்;
ஆதலால், நீ வரைந்து கொள்வாயாக என்றவாறு.

    எனவே,  வெளிப்படையாக  வரைவு  கூறியவாறு  உணர்க.  நடுநாள் இரவு -
இடையாமம். அயில் - வேல்.
(244)    
காமமிக வுரைத்தல்:
     காமமிக  வுரைத்தல்  என்பது,  தலைவி  வேட்கை  மிகவாயின துரைத்தல்.

 தென்னாக வண்டமிழ் வாணன்தென் மாறைச் செருந்தியுடன்
புன்னாக முங்கமழ் பூந்துறை வாசுரர் போற்றமிர்தம்
பின்னாக முன்வந்த பேதைதன் காமப் பெருங்கடற்கு
நின்னாக மன்றியுண் டோபுணையாவது நீந்துதற்கே.

     (இ-ள்.) பொதியமலையிற்   பிறந்த   வளவிய   தமிழைக்  கற்ற   வாணன்
தென்மாறை நாட்டிற் செருந்திப்பூவுடன் புன்னாகப் பூவும் கமழப்பட்ட   துறைவனே!
சுரர்   போற்றப்பட்ட   அமுதம்  பின்வர  முன்னே  தோன்றிய எங்கள்  தலைவி
ஆசையாகிய   பெரிய   கடலை   நீந்துதற்கு   மரக்கலமாவது   நின்  மார்பன்றி
வேறுண்டோ என்றவாறு.

     தென்நாகம் - பொதியமலை.  வண்டமிழ் - வளவிய தமிழ். `பூ` என்பதனைச்
செருந்தியுடனும்,   புன்னாகத்துடனும் கூட்டுக. சுரர் - தேவர். பேதை -  திருமகள்.
எனவே, தலைமகளைத் திருமகளாகக் கூறினார்.ஆகம் - மார்பு. புணை - மரக்கலம்.
செருந்திப்பூவுங் கூடிமணக்குந்