தஞ்சைவாணன் கோவை
210

 
தலைவன்மேற்   குறையை   உலகின்மேல்   வைத்துக் கூறினாள், `நன்று  நன்று`
என்பது குறிப்புமொழி.  ஆவி - வாவி.   ஆவி - உயிர்.  தெளித்தல் - தெளியச்
சொல்லுதல்.   ஒன்னார் - பகைவர்.   இன் : உவமைப்   பொருட்கண் வந்தது :
புலத்தல் - நொந்து கூறல்.
(253)    
இத்துணையும் பதினான்காம்நாட் செய்தியென் றுணர்க.
சென்றோ நீடலிற் காமமிக்க கழிபடர்கிளவி:
    சென்றோன்   நீடலிற்   காமமிக்க   கழிபடர்  கிளவி  என்பது,   தலைவன்
மாலைக்காலமளவும்   வாராது  
 வரவுநீட்டித்தலாற்  காமமிகுந்தவதனால்  மிகுந்த
நினைவொடு கூடிய சொல்.

 மயிலாடு தண்டலை மாறை வரோதயன் வாணனொன்னார்க்
கெயிலா கியகடற் கானலஞ் சேர்ப்பற் கிடையிருள்யான்
துயிலா நிலையொன்றுஞ் சொல்லாய் துணையுடன் சூழ்திரைத்தேன்
பயிலா மலரணை மேற்றுயி லாநிற்றி பாலன்னமே.

    (இ-ள்.) வெண்மை   நிறம்   பொருந்திய   அன்னமே!   மயிலாடப்  பட்ட
சோலைசூழ்ந்த    மாறைநாட்டின்     வரோதயனாகிய   வாணன்  
 பகைவர்க்கு
அரணாயிருக்கப்பட்ட   கடற்கழிக்  
 கரையையுடைய  சேர்ப்பதற்கு இடையிருளில்
யான்   துயிலாநிலை  யொன்றுஞ்  சொல்லாய்;  நீயோ
 துணைபிரியாமல்  திரை
சூழத்தக்கதாகத் தேன்செறிந்த அம்மலரணை மேல்துயிலாநின்றாய்; இது
 நினக்குத்
தகாது என்றவாறு.


`துணையுடன்  திரைசூழமலரணைமேல்  துயிலாநிற்றி` எனவே, தான்  அவையின்றி
யிருக்கின்றேனென்று கூறியவாறு உணர்க.
தண்டலை - சோலை. ஒன்னார் - பகைவர். எயில் - அரண். வாணன் ஒன்னாரை
நாட்டிலிருக்கவொட்டா  னாதலால்   அவர்   கடலேறிச் செல்வர், அதனால் கடல்
அவர்க்கு   அரணாயிற்று.   கானல் - கழிக்கரை.    இடையிருள் - இடையாமம்.
பயிலுதல் - செறிதல்.    பாலன்னம் - வெள்ளையன்னம்.    `சேர்ப்பன்`   என்று
தலைவனைக்   கூறியவதனால்   ஐந்திணையிற்    கிளவிப்    பொருளெத்திணை
கூறவேண்டுமோ   அத்திணைக்குரிய   தலைவனும்   தலைவியுமாகக்     கூறுதல்
இலக்கணமாதலின்,  இத்   தலைவனும்  தலைவியுமே  கூறப்பட்டு வருவர்; வேறு
தலைவனும் தலைவியும் அல்லர் எனக் கொள்க.

இவ்வாறு   உளம்  முதலியவற்றொடு கூறியும் புலம்பியும் அழுதும் பெறும்  பயன்
யாதோவெனின், மூடிவைத்து வேங்கலத்தை வாய்திறக்கில்