|
|
ஆவிபோதலால் உட்புழுக்கஞ் சிறிது தணியுமென்றுணர்க. |
(254) |
தலைவியைப் பாங்கி யாற்றுவித்தல்: |
தலைவியைப் பாங்கி ஆற்றுவித்தல் என்பது, பாங்கி தலைவிக்குத் துயர் ஆறும்படி கூறல். |
| ஆடுகம் வாநம் மகன்றவ ரூரக லாப்புதுநீர் பாடுகம் வாபொற் பசலைத் தார்திறம் பாங்கினெல்லாம் தேடுகம் வாதஞ்சை வாணனன் னாட்டன்பர் தேர்வழிநாம் சூடுகம் வாகவ லாதவர் கானற் றுறைமலரே.
|
(இ-ள்.) நம்மை யகன்ற அவரூரை யகலா வெள்ள நீரில் ஆடுகம் வா, பொற்பசலையை நமக்குத் தந்தவரது வெற்றியைப் பாடுகம் வா, தஞ்சைவாணன் நன்னாட்டிலுள்ள அன்பர் தேர் சென்ற வழிப்பக்கமெல்லாங் கவற்சியில்லாது தேடுகம் வா, அவர் கானற்றுறைமலரைச் சூடுகம் வா, அஞ்சலை என்றவாறு. |
தலைவி: முன்னிலையெச்சம். `அஞ்சலை` என்பது வருவிக்கப் பட்டது. கானற் றுறை மலர் - கழிக்கரைத் துறைமலர். திறம் - வெற்றி. |
(255) |
இத்துணையும் பதினைந்தாம்நாட் செய்தியென் றுணர்க.
|
தலைவன் வந்தமை பாங்கி யுணர்த்தல் : |
| பண்ணும் குழலும் பழுத்தசொற் பாவை பரியலெல்லா மண்ணும் புகழ்தஞ்சை வாணனொன் னாரென மைக்குவளைக் கண்ணும் கனையிருட் கங்குலு மாரன் கணைகள்பட்ட புண்ணும் புலரவந் தாத்தம தூர்வயிற் போனவரே.
|
(இ-ள்.) பண்ணிசையும் யாழிசையும் பழித்த சொல்லையுடைய பாவைபோல்வோய், எல்லா வுலகும் புகழ்கின்ற தஞ்சைவாணன் ஒன்னரென மைக்குவளைபோன்ற கண்ணில் நீரும், செறிந்த இருளோடு கூடிய இராக்காலமும், மாரன் கணைகள் பட்ட புண்ணும் புலரத் தமது ஊரிடத்துப் போனவர் வந்தார், ஆதலால் நீ வருந்தலை என்றவாறு.
|
குழல் - யாழ். பாவை: ஆகுபெயர். கண்ணிடத்து நிகழ்பொருளில் தொழில் இடத்துமேல் நின்றது. புலர - என்பது இறுதிவிளக்கு. உம்மைகள் எண்ணின்கண் வந்தன. `போனவர் வந்தார்` என இயையும். |
(256) |