தஞ்சைவாணன் கோவை
212

 
வந்தோன் தன்னொடு நொந்து வினாதல்:
வந்தோன்   தன்னொடு   நொந்து   வினாதல் என்புழி, நொந்து -  துன்பப்பட்டு;
வினாதல் - நினைந்து வினாதல்.
(236)    
இத்துணையும் பன்னிரண்டாநாட் செய்தியென் றுணர்க.

வந்தோன் தன்னொடு நொந்து வினாதல்:
 ஒருதலைக் கெய்திய கல்லதர்க் குச்செல்ல வோருயிர்த்தாய்
இருதலைப் புள்ளி ளியைந்தநுங் கேண்மையை யெண்ணியெம்மூர்
வருதலைக் கொண்க நினைந்திலை வாணன்தென் மாறைவண்டு
பொருநதலைக் குங்குழ லாளழ நீகண்டு போயபின்னே.

    (இ-ள்.)   கொண்கனே!   நீ   கல்பொருந்திய   வழியிற்   செல்ல   வாணன்
தென்மாறையில்   வண்டு  
 ஒன்றோடொன்று   பொருது   மாலையை யலைக்குங்
குழலாளை   அழக்கண்டு   போயினபின்,   ஒருதலையாய்ப்
  பொருந்திய   ஓர்
உயிரையுடைத்தாய்
  இருதலைப்புட்போ   லியைந்த உம்முடைய வுறவை யெண்ணி
எம் ஊரிடத்து வருதலை நினைந்திலை என்றவாறு.

`ஒருதலைக்   கெய்திய  ஓருயிர்த்தாய்`  எனவும், `கல்லதர்க்குச்   செல்ல  வண்டு
பொருதலைக்குங்  குழலாள்`  எனவுங்  கூட்டுக. ஒருதலை - நிச்சயம். கல்லதர் -
கல்வழி. எய்தல் - பொருந்தல். கேண்மை - உறவு.
(257)    
தலைவன் பாங்கியொடு நொந்து வினாதல்:
     நொந்து வினாதல் - எவ்வண்ணம் ஆற்றியிருந்தீரென்று வினாதல்.
  ஐவா யரவுற்ற தன்னவின் னாவிட ராற்றி யென்போல்
எவ்வா றிருந்திர்நீ ரெல்வளை யீரெதிர்ந் தாரைவென்று
மைவா ரணங்கொண்ட வாணன்தென் மாறை மருவலர்போல்
ஒவ்வா வலரையுங் கேட்டிரு வீரு மொருதனியே.
      (இ-ள்.) ஒளிவளையீர்! எதிரேற்ற பகைவரை வென்று அவரேறி வந்த கரிய
யானையை வாங்கிவந்த வாணனது தென்மாறை நாட்டை வந்து சேராதவர் போலப்
பொருந்தாத   பழிச்சொல்லையுங்   கேட்டு இருவீரும் ஒரு தனியே ஐந்தலையரவு
தீண்டியதேயொத்த   பொல்லாத்   துன்பத்தைப்  பொறுத்து  என்னைப்போல நீர்
எவ்வாறிருந்தீர்; இருந்தவகையைச் சொல்லவேண்டும் என்றவாறு.

     ஐவாயரவு - ஐந்தலைநாகம். இன்னா இடர் - ஐம்புலனால் வரும் பொல்லாத
துன்பம். யான்  இத்துன்பம்  அனுபவித்திருந்தேன்   என்பது தோன்ற, `என்போல்`
என்றார்.   எல்வளை - ஒளிவளை.   மருவலர் - அடையாதவர்.   அலர் - பழி.
ஒருதனி - ஒப்பற்ற   தனி.   நொந்து   வினாதல் - எவ்வண்ணம் ஆற்றியிருந்தீர்
என்று வினாதல்.
(258)