|
|
பருவங்கண்டு பெருமகள் புலம்பல்: |
பருவம்கண்டு பெருமகள் புலம்பல் என்பது, தவைன் பிரியியுங்கால் கார்க்கு முன்னே வருவலென்று குறிப்பாற் கூறிப் போயினனாகையால், கார்ப்பருவங் கண்டு தலைமகள் புலம்பிக் கூறுதல். |
குறிப்பாற் கூறியது எங்ஙனமெனின், `நீடேனென்றவன் நீங்கல்` என்னும் செய்யுளில், `மாலைப்பொழுது வருகுவல்யான்` என்றது, மாலைக்குரித்தாகிய பொழுது கார்காலமென்று குறிப்பானறிவித்தா றுணர்க. அக்குறிப்பறிந்து பாங்கி தலைவிக்குக் கூறயவதனால் தலைவி கார்கண்டு புலம்பினாள் என்பது. அன்றியும் மேற்கிளவி இகுளை வம்பாகத் தோன்றியது தலைவன் கூறிய கார்ப்பரவமன் றெனப் பொருள் கொளக்கிடந்தது. இவை யாவும் குறிப்பாற் கூறிய தென்றுணர்க. |
| மிகவும் பரந்த கரியகண் ணீர்செங்கை வெள்வளைபோல் உகவுந் துறந்தவ ருன்னல ராலுறை கார்பொழிய மகவுந் துணையுங் கலைதழு வுந்தஞ்சை வாணன்வெற்பின் அகவும் பெடைமயி லுந்தமி யேனெங்ஙன் ஆற்றுவலே. |
(இ-ள்.)சிவந்த கையினிடத்துச் சங்கவளை புகுந்ததுபோல மிகவும் விரிவாகிய கரிய கண்ணினீர் துளித்துளியா யுதிரவும் துறந்த தலைவர் நினைந்திலர்; ஆதலால் காரானது துளிகளைப் பெய்ய மழைத்துன்பத்தாலஞ்சி மிகவும் துணையும் முசுக் கலையைத் தழுவும் தஞ்சைவாணன் வெற்பிற் பெடைமயிலும் அகவும்; தனியாயிருக்கப்பட்ட யான் எங்ஙனம் ஆற்றியிருப்பேன் என்றவாறு. |
`செங்கை வெள்வளைபோல் மிகவும் பரந்த`எனக் கூட்டுக உகுத்தல்-உதிர்தல். உன்னலர் - நினைந்திலர். உறை - துளி. கார் - முகில். துணை - பெண்குரங்கு. கலை - முசுக்கலை. |
| 1`கலையென் காட்சி யுழைக்கு முரித்தே` `நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்` |
என்னும் சூத்திரங்களால் கலை முசுவின் ஆண்பெயரென்று கொள்க. பெடைமயில் என்புரி உம்மைத்தொகை. |
(268) |
|
1. தொல், பொருள், மரபியல் - 45, 46. |