கட
தஞ்சைவாணன் கோவை
222

 
தலைமகளாற்றல்:
  இன்புற்ற காதலத் திருவர்க்கு மொன்றுயி ரென்று சொன்னார்
அன்புற்ற காதல ராதலி னாலகன் றாரெனநாம்
துன்புற்ற காலத் தவருமு றாரல்லர் தோழிசொல்லும்
வன்புற்ற காரளிக் குந்தஞ்சை வாணன்தென் மாறையிலே.

    (இ-ள்.) கார்போற்  கொடுக்குந்   தஞ்சைவாணன்   தென்மாறை    நாட்டில்
தோழிசொல்லுஞ்  சொல்லும்  வற்புறுத்தலைப்  பொருந்திய; அன்றியும், அன்புற்ற
காதலர்   
 தாம்  இன்புற்ற  காலத்திருவர்க்கும்  உயிரொன்றென்று   சொன்னார்;
ஆதலால்,  நம்மைப்   பிரிந்தாரென்று  நாம்  துன்பமுற்ற   காலத்து   அவரும்
வாராரல்லர் என்றவாறு.

    எனவே; வருவரென்பதாயிற்று.  `அன்புற்ற காதல ரின்புற்ற காலத்து` எனவும்,
`உயிரொன்று`    எனவும்  மாறுக.   உறாரல்லர் - வாராரல்லர்.   வற்புறுத்தல் -
அற்றுவித்தலைப் பொருந்தல். காரளிக்கும் என்பது உவமத்தொகை.

அவனவட் புலம்பல்:
     அவன்  அவண் புலம்பல்  என்பது பொருளீட்டச்  சென்ற  தலைவன் தன்
கருமமுற்றியபின்றையே அவ்விடத்துத் தலைவியை நினைத்துப் புலம்பல்.
(272)    
  விழிகுழி யும்படி தேர்வழி பார்த்தெனை வீழ்ந்துவண்டு
கொழுதிமி ருங்கழல் சோரக் கிடந்து குடங்கையின்மேல்
ஒழுகிய அஞ்சன வெள்ளத் துணங்கு மணங்கைமுன்சென்
றெழுகெனு நெஞ்சமென் னேயவ ரோவெளி லென்சொல்லுமே.

1(இது பிறசெய்யுட் கவி)
(273)
இத்துணையும் பதினாறாநாள் செய்தியென் றுணர்க.
பதினாறாம் நாள்:
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன்

ஐம்பத்தொன்றாம் நாள்:
     மீண்டு வந்தமையால் முப்பத்துநான்கு நாள்
இடைப்பட்டதென உணர்க.

1. அம்பிகாபதிகோவை - 319.