கட
223
வரைவு கடாதல்

 
மீண்டுவருங்காலைப் பாகனொடு சொல்லல்:
  வன்மா முடுக வலவதிண் தேரினி வாணன்றஞ்சைக்
கென்மா லுறுநெஞ்சின் முசெல நாகிள வேறுபுல்லிப்
பொன்மா மணியும் பிரிந்திருந் தாரும் புலம்பமன்றில்
சென்மாலை அந்திகண் டாற்றரி யாளென் திருந்திழையே.

     (இ-ள்.) கழுத்திற்கட்டிய இரும்பிற்செய்த பெரிய மணியும் கணவரைப் பிரிந்த
மாதரும் புலம்புறப்  பசுவானது மழ  விடையைச்  சேர்ந்து  மன்றத்திற்  செல்லும்
மாலையாகிய அந்திக் காலத்தைக் கண்டால், என் திருந்திழை ஆற்றாள்; ஆதலால்,
பாகனே! வாணன்  தஞ்சையூர்க்கு என்  ஆசை  கொண்ட  நெஞ்சு  செல்வதற்கு
முன்னே, இன்று  திண்ணிய  தேர்செல்லத் தேரிற்  பூட்டிய  வலிய  குதிரைகளை
முடுகச் செய் என்றவாறு.

     வல்-வலிமை;  விரைவுமாம்.  மா-குதிரை.  `முடுகச்செய்`  என்பது செய்யுள்
விகாரத்தாற் றொக்கது.  வலவன் - தேர்ப் பாகன்:  அண்மை விளி. ஏறு - விடை.
1`எருமையு மரையும் பெற்றமுமன்ன` என்னும் மரபியற் சூத்திரவிதியானும் உணர்க.
பொன் - இரும்பு;

  2`வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன்மீன்விழுங்கி யற்று`
என்றார் பிறரும்.

  `தங்கையார் தாங்குங் கானப் பெருங்கவலை
யெங்கு மறவோ ரிரைத்தெழுந்தார் - தங்களைக்கண்
டென்றுகாண் வேட்கை மடிசுரப்புத் தோன்றுவ
கன்றுகாண் மெய்குளிர்மின் கண்டு`
என்றார் பிறரும்.
மாலையந்தி,  மீமிசை என்பதுபோல் நின்றது.   திருந்திழை: அன்மொழித்தொகை.
(274)    
மேகத்தொடு சொல்லல்:
     மேகத்தொடு  சொல்லல்  என்பது,  தலைவன்   வருங்காலத்து   மேகத்தை
நோக்கிச் சொல்லல்.
  வேண்டும் பொருளைத் தரும்பொருட் போய்முற்றி மீண்டவென்றேர்
தூண்டும் பரிமுன் துனைமுகில் காள்சென்று சொல்லுஇந்து
தீண்டுங் கொடிமதில் சூழ்தஞ்சை வாணனைச் சேரலர்போல்
ஈண்டும் பசலைமெய் போர்த்திருப் பார்தமக் கென்வரவே.

1. தொல். பொருள். மரபியல் - 39. 2. குறள். சூது - 1.