கட
தஞ்சைவாணன் கோவை
226

 
  1"வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல்
இருதுவின் கண்ணுடைத் தென்மனார் புலவர்"
    என்னுஞ் சூத்திரவிதியின், இருதிங்கள் சென்றதென்று கூறாது   முப்பத்தைந்து
நாள் சென்றதென்று கூறியது. என்னையெனின், இரு திங்கள் சென்று வருவதல்லது
இதற்குள்ளாக    வருவது   
 அன்றென    இலக்கணங்   கூறிற்றிலர்; இருதுவின்
கண்ணுடைத்து  எனக்  கூறுதலான்,  இவ்விருதுவிடை  எவ்வளவு  
  வரையறைப்
பட்டதோ அவ்வளவே இலக்கமெனக் கொள்க.

வாளிரண்டு   மாறுவைத்தபோல்  மழைக்கண்  மாதரார்` எனப் பிறரும்,    `மாறு`
எதிராகக் கூறியவாறு உணர்க.
அன்றி,  இருதிங்கள்  சென்று  வந்தானெனின், களவொழுக்கம் மூன்று திங்களாம்;
ஆகவே, இலக்கணவழுவாய் அகப்பொருள் சிதைவாமெனக் கொள்க.

  நினையீர் பொருட்குப் பிரிந்தய னாட்டுழி நின்றுழிவேள்
அனையீர் நினைந்து மறிதிர்கொல் லோவஞ்சொ லாலறிவோர்
வனையீ ரிதழ்க்கண்ணி வாணன்தென் மாறையை வாழ்த்தலர்போல்
நனையீ ரிதழ்க்கண்வை காவெவ்வ நோயுற்ற நவ்வியையே.

    (இ-ள்.) வேள்  அனையீர்,  அழகிய  சொல்லாலே  புலவர்   புனையப்பட்ட
சொல் ஓரிதழும்  பொருள்   ஓரிதழுமாகிய   தமிழ்  மாலையையுடைய  வாணன்
தென்மாறையை வாழ்த்தாதவர் போல்,  நீரால்  நனைந்த  இரண்டி  தழையுடைய
கண்ணுறங்காத  துன்பந்  தரப்பட்ட  வேட்கை
 நோயையுற்ற  மான்போன்றவளை
நினையீர்; அப்பொருள் காரணமாகப் பிரிந்து அயனாட் டிடத்துத்
  தங்குமிடத்தில்
நீர் நினைந்தும் அறிதிரோ என்றவாறு.

பகல்வருவானை இரவுவருகென்றல்:
  நினையீர் பொருட்குப் பிரிந்தய னாட்டுழி நின்றுழிவேள்
அனையீர் நினைந்து மறிதிர்கொல் லோவஞ்சொ லாலறிவோர்
வனையீ ரிதழ்க்கண்ணி வாணன்தென் மாறையை வாழ்த்தலர்போல்
நனையீ ரிதழ்க்கண்வை காவெவ்வ நோயுற்ற நவ்வியையே.
    அறிவோர் - புலவர்.     வனைதல் - புனைதல்.   கண்ணி - தமிழ் மாலை.
வைகுதல் - தங்குதல்;
கண்ணுக்குத் தங்குதல் இமைத்தல்; தங்காதது - இமையாதது.
எவ்வம் - துன்பம். நோய் - வேட்கை; நவ்வி - மான்; இவ்விரண்டும் ஆகுபெயர்.
(278)    
அறிவோர் - புலவர்.      வனைதல் - புனைதல்.      கண்ணி - தமிழ்  மாலை.
வைகுதல் - தங்குதல்;
கண்ணுக்குத் தங்குதல் இமைத்தல்; தங்காதது - இமையாதது.
எவ்வம் - துன்பம். நோய் - வேட்கை; நவ்வி - மான்; இவ்விரண்டும் ஆகுபெயர்.
(278)    
தலைவனினைத்தமை செப்பல்:
  கானெடுங் குன்றங் கடந்துசென் றேனொரு காலுமைதோய்
மானெடுங் கண்ணி மறந்தறி யேன்வண்கை வாணன்தஞ்சை
நீனெடும் பெண்ணைச் சுரும்பையுஞ் சூது நெருங்குகொங்கைத்
தேனெடுங் கண்ணிமென் பூங்குழன் மாதர் திருமுகமே.

     (இ-ள்.) மைதோய்ந்து  மான்போன்ற நெடிய  கண்ணையுடையாய்,  வளவிய
கையினையுடைய வாணன் தஞ்சை நகரின்கண் நீலநிறமாகிய  நெடிய  பனையினது
கரும்பையும் சூதும், ஒப்ப நெருங்குங் கொங்கையையும், வண்டு

1. அகப்பொருள் விளக்கம், அகத்திணையியல் - 40.