கட
227
வரைவு கடாதல்

 
உறையும் நெடிய  மாலையணிந்த  மெல்லிய  பொலிவினையுடைய  கூந்தலையும்,
மாதர் அழகிய முகத்தையும், காடும் நெடிய குன்றும் கடந்து சென்றேனாகிய யான
் ஒருகாலும் மறந்தறியேன் என்றவாறு.

      எனவே, மறந்திலனாதலால் நினைந்திலன் என்று கூறிய வாறாயிற்று.

  1`உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்`

என்பதனானுணர்க.

     `கானெடுங்குன்றம்` என்புழி உம்மைத்தொகை. நீலம் நீல் எனக் கடைக்குறை;
`நீனிற வண்ணன்` என்புழிப்போல.

     பெண்ணை - பனை. சூது - வல். தேன் - வண்டு.
(279)    
ஆற்றுவித்திருந்த அருமை சாற்றல்:
     ஆற்றுவித்திருந்த அருமை சாற்றல் என்பது, பாங்கி தலைவியை
யாற்றுவித்திருந்த அருமையைத் தலைவற்குக் கூறல்.

  உயரா மலகத் தருங்கனி நீர்நசைக் குண்சுரம்போய்
வியராமல் இல்லின் விடுத்தகன் றாளைமென் பூஞ்சிலம்பா
அயராமல் அஞ்சலென் றாற்றுவித் தேனிவ் வவனியெல்லாம்
மயராமல் வந்த பிரான் றஞ்சை வாணன்தென் மாறையிலே.

     (இ-ள்.) இப்புவியெல்லாம் மயங்காமல்  வந்த  பிரானாகிய தஞ்சைவாணனது
தென்மாறை நாட்டின் மெல்லிய பூமலிந்த சிலம்பனே! உயர்ந்த நெல்லியின் அரிய
கனியை நீர்வேட்கைக்கு உண்ணப்பட்ட சுரத்திடை உடன்போய் வியர்வடையாமல்
இல்லின்கண்   விடுத்து   நீர்   பிரிந்தவளை    இளையாமல்    அஞ்சலென்று
ஆற்றுவித்தேன் என்றவாறு.

     ஆமலகம் - நெல்லிக்கனி.         அருங்கனி - மழையின்றி    அங்கங்கு
ஒவ்வொன்றா யிருக்குங் கனி. நீர்நசை - நீர்வேட்கை. வியராமல் - வியர்வடையாமல்.
அயராமல் - இளையாமல். மயராமல் - மயங்காமல்.

`என்பொருட் பிரிவுணர்த் தேந்திழைக் கென்றல்` என்பது பிரிவறிவுறுத்தற்கு உரியது.

`பாங்கி நின்பொருட் பிரிவரை நீ யவர் கென்றல்` என்பது பிரிவுடன்  படாமைக்கு
உரித்து;


1. குறள். காதற்சிறப்புரைத்தல் - 5.