|
|
என்புழிப்போல. துவலை - திவலை. அணியெதிர்ந்து என்புழி ஆல் நமர் என வருவிக்க. பணி - பாம்பு. நோய் - வேட்கை. எஞ்ஞான்றும் மணச்சடங்க போற் றோன்றும் துறைவராதலால் இங்குவரவே மணச்சடங்கு உண்டாம் என்பது தோன்றி நின்றது. |
(283) |
தலைமகளுவகையாற்ற துளத்தொடு கிளத்தல்: |
தலைமகள் உவகையாற்றாது உளத்தொடு கிளத்தல் என்பது தலைவி மகிழ்ச்சி யடங்காது நெஞ்சொடு கூறல்.
|
| சோகா குலமெய்தல் காண்டுநெஞ் சேநந் துறைவரெனும் நிகா னுடன்பள்ளி நீள்வங்க மேறி நிலம்புரக்கும் மாகா விரியன்ன வாணன்தென் மாறைமன் னன்பகையும் ஏகா விருட்கங்கு லாங்கடற் காலை யெனுங்கரையே.
|
(இ-ள்.) நெஞ்சே! நம்முடைய துறைவரென்னும் மீகாமனுடன் படுக்கையாகிய மரக்கலமேறி, நிலத்தைக் காக்கும் பெரிய காவிரிக்கொப்பாகிய வாணனாகிய தென்மாறை மன்னனுக்குப் பகையாகினாரும் ஏகுதற்கரிய இருண்ட கங்குலாங் கடலைக் கடந்து காலையென்னுங் கரையைக் காண்குதும்; ஆதலால், நீ சோகத்தால் ஆகுலமெய்தலை என்றவாறு. |
சுப்பிரயோகம், விப்பிரயோகம், சோகம், மோகம், மரணம் என்னும் மாரன் அம்பால் வரும் அவத்தை ஐந்தனுள், `சோகம்` அசோக பாணத்தால் வரும் அவத்தையென்றுணர்க. ஆகுலம் - துன்பம். காண்டும்: எதிர்காலமுற்று வினைச்சொல். நீகான் - மீகாமன். பள்ளி - படுக்கை. வங்கம் - மரக்கலம். புரத்தல் - காத்தல். காலை - விடியற்காலம். பகையும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. இதனுள் இயைபுருவகம் வந்தவாறு காண்க. |
(284) |
தலைவனைப் பாங்கி வாழ்த்தல்: |
| மாரியஞ் சுங்கொடை வாணன்தென் மாறையில் வாழிவண்டார் வேரியந் தொங்கல் விரைகமழ் மார்ப விடாதவம்பல் சேரியம பொய்கைத் துறையலர் வாடநின் செவிவமணம் தூரியஞ் சங்கதி ரக்காட்டு நீயன்று சூட்டலரே.
|
(இ-ள்.) வண்டு உண்ணுங் கள் பொருந்திய மாலை மணங் கமழும் மார்பனே, மறந்துவிடாத அம்பலையுடைய சேரியாகிய பொய்கைத் துறையிலே தோன்றிய அலர் வாடநின் அழகாகிய மணக்கோலத்தால் அன்று சூட்டின அலரை இன்று பலருமறியத் தூரியமும் சங்கும் அதிர நீ சூட்டிக்காட்டு; முகில் அஞ்சுங் கொடையையுடைய வாணன் தென்மாறை நாட்டில் நெடுங்காலம் வாழ்வாயாக என்றவாறு. |