கட
தஞ்சைவாணன் கோவை
236

 
நாட்டில்  என்னுயிர்போன்ற  தையலே!  நீ  உளங்  குழைந்து  கலுழக்  காரணம்
என்னை,  நுண்மணலார்ந்த  திரைவந்து  உன்  வண்டலம்பாவை  யழித்தனவோ,
ஒருகாலுஞ்  சினவாத  அன்னை  சினந்தனளோ,  யான்  அறியக்    கூறுவாயாக
என்றவாறு.

அயிர் - நுண்மணல். வண்டலம்பாவை - மண்ணாற்செய்த பாவை. செயிர்த்தல் -
சினத்தல்.  வயிர் - போர்க்களத்தில்   ஒலிக்கும்  கொம்பு.  நரலுதல் - ஒலித்தல்.
கலுழ்தல் - அழுதல்.  என் - யாது காரணம்.  இதனுள்,   `கூறுவாயாக`  என்பது
சொல்லெச்சமாக் நின்றது.
(228)    
இத்துணையும் பன்னிரண்டாநாட் செய்தியென் றுணர்க.
தலைமகள் கலுழ்தற்காரணங் கூறல்:
  தாரணி கொண்ட விருதோ ளொருவர் தனித்துழியென்
வாரணி கொங்கை மணத்துசென் றார்தஞ்சை வாணனென்னார்
தேரணி வென்ற செழும்புகர் வேல்விழித் தேனினஞ்சூழ்
காரணி மென்குழ லாயது வேகலுழ் காரணமே
    (இ-ள்.) தாரை அழகாக்கொண்ட இருதோளையுடைய ஒருவர்  தனித்தவிடத்து
என்  வாரணிந்த  
 கொங்கையைக் கூடிச்  சென்றார்; தஞ்சைவாணன்  ஒன்னாரது
தேர்நிரையை வென்ற செழுமையாகிய இரத்தக்கறை நிறத்தையுடைய வேல்போன்ற
விழியையும்  வண்டினஞ்   சூழ்ந்த    மேகத்தின்  அழகைக்கொண்ட  மெல்லிய
குழலையும் உடையாய்! யான் அழுங் காரணம் அது என்றவாறு.

தார் - மாலை.  வார் - கச்சு.  ரேணி - தேர்நிரை.   புகர் - உதிரக் கறை.  கார்.
மேகம். அணி - அழகு.
(289)    
தலைவன் தெய்வங் காட்டித் தெளிப்பத்
தெளிந்தமை யெய்தக் கூறல்:
     தலைவன்  தெய்வங்  காட்டித்  தெளிப்பத்  தெளிந்தமை  எய்தக்   கூறல்
என்பது,  தலைவன்  தெய்வத்தைக்  காட்டிக்   கரியென்று   சூளுறவு   சொல்ல,
மெய்யென்ற தெளிந்து அதனைப் பாங்கிக்குப் பொருந்தக் கூறல்.

  துதித்தே னணங்கொடு சூளுமுற றேனென்ற சொல்லைமெய்யா
மதிந்தே னயர்ந்து மதியிலி யேன்தஞ்சை வாணன்வையை
நதித்தே னினம்புணர் மாதர்கண் போல நகைக்கு நெய்தல்
பொதித்தே னுகர்ந்தக லுங்கழிக் கானற் புலம்பர்வந்தே.

     (இ-ள்.) தஞ்சைவாணன்   வையைநதியிலே   குலாவப்பட்ட    வண்டினம்
மடவார்கண்போல்   ஒளிவிடும்  நெய்தற்   பூவினிடத்துப்   பொதிந்த   தேனை
நுகர்ந்து பிரிந்து போய் கழிக்கரைச் சோலையையுடைய புலம்பர் வந்து