கட
241
வரைவு கடாதல்

 
இருட்குறி  வருதலை  முன்னம்  ஒருநாள்  அன்னை    கண்டாள்   என்றவாறு.

     கார்முகம் - வில். மங்காமல் - கெடாமல். வண்டானம் - நாரை. `ஆழிசங்கு`
என இயையும்.  கண்டல் - தாழை.  சங்கு  கொண்டெறிதல் - திரை   விசையால்
சங்கினை யுந்துதல்.

     இவற்றுள், `கலுழ்தற் காரணம் கூறல்` ஒன்றும் ஒழித்து,  ஏனைய வெல்லாம்
பாங்கி  வினாவாதொழியவும்,  தலைவி  அறத்தொடு   நிற்கும்  நிலை   தனக்கு
உரியவாமாறு அறிந்துகொள்க.

(296)    
பகலினுமிரவினும் பயின்றுவரு கென்றல்:
  செவிலி தலைமகள் வேற்றுமைகண்டு பாங்கியை வினாதல்:
பொன்னுற்ற கொங்கையு முத்துற்ற கண்ணுமிப் போதுகண்டேன்
பன்னுற்ற சொல்லுமின் பாலுங்கொள் ளாள்பதி னாலுலகும்
மன்னுற்ற வண்புகழ் வாணன்தென் மாறையென் மானனையாட்
கென்னுற்ற தென்றறி யேன்புனங் காவல் இருந்தபின்னே.

     (இ-ள்.) பொன்போன்ற    பசலைநிறம்      பொருந்திய    கொங்கையும்
முத்துப்போல  நீருற்ற  கண்ணும்  இப்போது  கண்டேன்; அதுவன்றியும்   யான்
சொல்லுஞ்சொல்லும்  இனிய  பாலும்  உட்கொள்ளாள்; ஆதலின்,  பதினாலுலகும்
மன்னுற்ற  வளவிய  புகழையுடைய  வாணன்   தென்மாறை   நாட்டில்   புனங் 
காவலிருந்த  பின்  என்  மான்போற்வட்கு  யாதுற்றதென்று  யான்   அறியேன், 
என்றவாறு.

 

     `பதினாலுலகும்` என்புழி உம்மை முற்றும்மை.   `புனங்காவ லிகந்தபின்னே`
என்று பாடமோதுவாரு முளர்.
(297)    
பாங்கி வெறிவிலக்கல்:
     பாங்கி  வெறி  விலக்கல்  என்பது,  செவிலி  வெறியாட்டாளவை யழைத்து
மகட்கு  நோயுற்றவாறும்,  அது  தீருமாறும  சொல்ல  வேண்டுமென்ற  கேட்புழி,
தெய்வம்   வந்தாடும்போது,  பாங்கி   அத்தெய்வத்தை  ஆடவேண்டா   என்று
விலக்குதல்.

     வெறியாட்டாளன் ஆடு பலிகொடுத்தால் திரும் என்புழி அவ்வாட்டைக்
கொல்லாமல் விலக்கல் எனினும் அமையும்.

  அறியாமை யானொன்று கேட்கலுற் றேனும்மை யாவதொன்றும்
குறியா மறியுயிர் கொள்ளவென் றோகுரு திப்பலிகூர்
வெறியால் இவளுயிர் மீட்கவென் றோவென்றி வேல்வலத்தீர்
சிறியார் மனையில்வந் தீர்தஞ்சை வாணன் சிலம்பினின்றே.

(இ-ள்.) வெற்றிவேலை வலத்தில் உடையவரே, நும்மை யாம் அறியாமையினால்
ஒன்று கேட்கலுற்றேம், ஆவதொன்றுங் குறியாது