|
|
திருவென்று கூறினமையால், செந்நாண்மலர் - தாமரைமலர். கோலம் - அழகு. விரவுதல் - கலத்தல். |
| 1`உயிரினுஞ் சிறந்தன்று நாணே நாணினுஞ் செயிர்தீர் காட்சிக் கற்புச் சிறந்தன்ற` |
என்னுஞ் சூத்திரத்தா னுணர்க. |
(311) |
தலைவி யொருப்பட்டெழுதல்: |
| பலரே சுமந்த வுரகளுந் தாயர்தம் பார்வைகளும் சிலரே சுமந்து தரியவல் லார்செய்ய செண்பகநாண் மலரே சுமந்த வயற்றஞ்சை வாணனை வாழ்த்தலர்போல் அலரே சுமந்து சுமந்தித்த வூர்நின் றழுங்குகவே. |
(இ-ள்.) பலர் ஏசிச் சொல்லும் அந்த வார்த்தைகளும் தாயர் சினந்து பார்க்கின்ற கொடிய பார்வைகளும் சுமந்து திரிய வல்லமையுடையார் சிலருளர், என்னால் முடியாது; சிவந்த சண்பக நாண்மலரைச் சுமந்த வயல் சூழந்த தஞ்சைவாணனை வாழ்த்தாத பகைவர்போல வசை கூறுஞ் சொல்லையே சுமந்து சுமந்து இந்த வூரிலுள்ளார் நின்றிரங்குக என்றவாறு. |
`சுமந்து - திரியவல்லார் சிலரே` எனக்கூட்டுக. `என்னால் முடியாது` என்பது அவாய்நிலையான் வந்தது. `இந்தவூர் நின்றழுங் குகவே` என்பது, இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்து மேல் நின்றது. அழுங்குதல் - இரங்குதல்; கெடுதல் என்று பொருள் கூறுவாருமுளர். இவள் கற்புடையளாதலால், கூறிய சொற்பிழையாள்; ஆதலால், அவ்வாறன்றி மீண்டும் வந்து மண முடித்தலின்; அது பொருளன்மையுணர்க. இரங்கல் பொய்க்குமோ வெனில் இவள் உடன்போயின பின்னர் அவ்வூரிலுள்ளார் இரங்குதலின் பொய்யாதாயிற்று. |
(312) |
| பாங்கி, சுரத்தியல்புரைத்துழித் தலைமகள் சொல்லல்: செல்லிற் கொடிய களிற்றண்ணல் வாணன்றென் மாறைமன்னன் வில்லிற் கொடிய புருவமின் னேயென் விளம்புதிநீ சொல்லிற் கொடியநம் மன்னையைப்போல்பவர் சூழ்ந்திருக்கும் இல்லிற் கொடியகொல்லோசெல்லு நாட்டவ் விருஞ்சுரமே.
|
(இ-ள்.)இடியினுங் கொடியதாகிய களிற்றுப்பெருமையை யுடைய வாணனாகிய தென்மாறை மன்னனது கையிற் பிடித்த வில்லினங் கொடிய புருவத்தையுடைய மின் போன்றவளே1 யான் செல்லும் நாட்டில் அப்பெரிய சுரமானது, சொல்லிலே கொடியவளாகிய நம் அன்னையைப் போல்வார் |
|
1. தொல். பொருள். களவியல் - 22. |