251
உடன்போக்கு

 
தலைவி நாணழிவிரங்கல்:
சூழ்ந்திருக்கும் இல்லினும் கொடியதோ என்றவாறு.

`சுரம் கொடியகொல்  நீ விளம்புதி` என்றியையும். செல்லின் என்புழி, சிறப்பும்மை
தொகுத்தல். செல் - இடி. அண்ணல் பெருமை. கொல்: அசை. ஓகாரம் எதிர்மறை.
சுரம் - காடு.
(313)    
பாங்கி, கையடை கொடுத்தல்:
     பாங்கி   கையடை கொடுத்தல் என்பது, பாங்கி தலைமகளைத் தலைமகற்குக்
கையடை கொடுத்தல்; கையடை - அடைக்கலம்.

 1`வடமால் வடநிரை சாயினும் வண்புயல் வாரிபுகும்
கடனா கியநெறி கைவிட நீக்கினுங் கந்தலைக்கும்
அடன்மா களிற்றன்ப நின்னையன் னார்பின்னை யென்னையென்னார்
2`உடனாய கேண்மை யொழிந்தறி யாரிவ் வுலகத்திலே.`
(314)    
(இது பிறசெய்யுட் கவி)

பாங்கி, வைகிருள் விடுத்தல்:

பாங்கி வைகிருள் விடுத்தல் என்பது,பாங்கி யிருளார்ந்த இடையாமத்தில் விடுத்தல்;
வைகுதல் - தங்குதல்.

 பொழிநான மன்றலம் பூங்குழல் நீங்கள் புணர்ந்துசெல்லும்
வழிநாடி நும்பின் வருகுவல் யான்தஞ்சை வாணன்வையைச்
சுழிநாணு முத்திநின் றொல்கிளைக் கேற்பன சொல்லியின்னா
மொழிநா வடங்க மொழிந்தய லாரை முகங்கவிழ்த்தே.

(இ-ள்.) மான்மதம்  பொழியப்பட்ட மணத்தோடு கூடிய பூவையணிந்த  குழலையும்
தஞ்சைவாணன்   வையைச்   சுழி   நாணப்பட்ட வுந்தியையும் உடையாய்,  நின்
பழமையால்   வருகின்ற  சுற்றத்தார்க்கு  ஏற்பனசொல்லி, அயலாரை  அலர்கூறிய
நாவடங்க  மொழிந்து  தலைவளையச்   செய்து, நீங்கள் கூடிச்செல்லும்  வழிதேடி
யானும் பின்னே வருவேன் என்றவாறு.


1. அம்பிகாபதிகோவை - 325.
2. `பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரப்பச் சிறந்தெரி யாடிதென்
தில்லையன் னாடிறத் துச்சிலம்பா அறத்திருந் துன்னரு ளும்பிறி தாறி
னருமறையின் திறந்திரிந் தார்கலியும்முற்றும் வற்றுமிச்சேணிலத்தே.`
கோவையார் - 213; இது சில பிரதிகளிற் காணப்படுகிறது.