|
|
வழியா - வழிந்து. கழியாத - நீங்காத. ஒழியாது - விடாது. ஆல் : அசை. ஒன்றை என்புரிச் சிறப்பும்மை விகாரத்தாற்றொக்கது. |
(326) |
செவிலி தெய்வம் வாழ்த்தல்: |
| இணங்கிப் புவனத் தெவருமில் லாவென் இளங்கொடியாள் உணங்கிக் கழிதலொழியவென் பால்வர உன்னையன்பால் வணங்கிப் பலமுறை வாழ்த்துகின் றேன்தஞ்சை வாணன்தெவ்வை அணங்கித் திரள்புயத் தான்மல யாசலத் தாரணங்கே.
|
(இ-ள்.) பகைவரை வருத்தியவதனாற் பூரித்துத் திரண்ட புயத்தை யுடையவனாகிய தஞ்சைவாணனது பொதியமலையிலிருக்கின்ற அரியதெய்வமே! இப்புவனத்து நட்புக் கூடுதற்கு எவரும் இல்லாத என் இளங்கொடிபோல்வாள் வாடிப் பாலைவனத்துப் போதலையொழிய, என்னிடத்து வர, உன்னை அன்பாற் பலமுறை வணங்கித் துதிக்கின்றேன்; வரின் நினக்குச் சிறப்புச் செய்வேன் என்றவாறு.
|
இணங்க - இணங்கு எனத் திரிந்து நின்றது; |
1`காப்பி னொப்பி னூர்தியி னிழையின்` |
என்னும் வேற்றுமையியற் சூத்திரத்தான், இழைத்தல் என்னும் சொல் இழை என நின்றாற்போலக் கொள்க. உணங்கி - வாடி. கழிதல் - போதல்.அணங்கி -வருத்தி. மலயாசலம் - பொதியமலை. ஆரணங்கு - அரிய தெய்வம். `வரின் நினக்குச் சிறப்புச் செய்வேன்` என்பது அவாய்நிலையான் வந்தது. இவை மூன்ற கிளவியும் செவிலி புலம்பற்கு உரியவாம் என்க. |
(327) |
செவிலி நற்றாய்க்கறத்தொடு நிற்றல்: |
செவிலி நற்றாய்க்கு அறத்தொடுநிற்றல் என்பது செவிலி நற்றாய்க்கு உடன்போக்கை வெளிப்படுத்திக் கூறல். |
| சகநல்க வந்தருள் சந்திர வாணன்தென் தஞ்சைநல்லாய் முகநல்கி நல்க முலைகொடுத் தாரின்முத் தங்கொடுத்தார் மிகநல்ல ரென்பது மன்பதை தேற விடலைபின்னே மகநல்கு மந்தியங் கானடந் தாளுன் மடந்தையின்றே.
|
(இ-ள்.) உலகத்தில் மகிழ்ச்சி கொடுக்க வந்தருளப்பட்ட சந்திரவாணனது அழகிய தஞ்சையிலிருக்கின்ற நல்லாய்! முகங்கொடுத்து மேலைக்கு |
|
1. தொல். சொல். வேற்றுமையியல் - 72. |