கட சென்று கோத்தாற்போலவும், வெங்கதிர்க் கனலியும் தண்கதிர் மதியமும் தன்கதி வழுவித் தலைப் பெய்தாற்போலவும் தலைப்பெய்து ஒருவரொருவரைக் காண்டல் நிமித்தமாகத் தமியராவர் என்பது.
| | புயலே சுமந்து பிறையே அணிந்து பொருவிலுடன் கயலே மணந்த கமல மலர்ந்தொரு கற்பகத்தின் அயலே பசும்பொற் கொடிநின்ற தால்வெள்ளை அன்னஞ்செந்நெல் வயலே தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன் மலையத்திலே.
| உரை கூறுமிடத்து 1நான்கு வகையாற் கூறப்படும். அவை யாவையெனின், கருத்துரைத்தல், கண்ணழித்தல், பொழிப்புத்திரட்டல், அகலங்கூறல் என இவை. அவற்றுள், கருத்துரைத்தலாவது - சொல்லப்படுஞ் செய்யுளின் கருத்தையுரைத்தல். கண்ணழித்தலாவது - பதப்பொருள் உரைத்தல். பொழிப்புத்திரட்டலாவது - அச் செய்யுளிற் கூறப்படும் பொருளைத் தொகுத்து ஒரு பிண்டமாகக் கூறுதல். அகலங் கூறலாவது - அச்செய்யுளின் பொருளைத் தூய்மை செய்தற்குக் கடாவிடை யுள்ளுறுத்தி ஐயந்தீர விரித்துக் கூறல்.
| அவற்றுள் இச்செய்யுட்குக் கருத்துரை யாதோவெனின், கிளவி கூறவே 2கருத்துரை விளங்கிநின்றதெனக் கொள்க.
| (இ-ள்.) புயலே சுமந்து - புயலைத் தாங்கி, பிறையே அணிந்து - மதிக்கலையைத தரித்து, பொரு வில்லுடன் கயலே மணந்த கமலம் மலர்ந்து - போர் செய்யும் வில்லுடனே கெண்டைமீன் பொருந்திய தாமரைமலர்ந்து, ஒரு கர்பகத்தின் அயலே -ஒரு கற்பகத்தின் பக்கத்து, பசும்பொற்கொடி - பசிய காமவல்லிக் கொடி, நின்றது - என் கண்ணெதிரே நின்றது, ஆல்: அசை, வெள்ளை அன்னம் - வெள்ளை நிறத்தையுடையஅன்னம், செந்நெல் - சிவந்த நெல், வயல் - கழனி, தடம்பொய்கை - பெரிய வாவி,சூழ் - சூழ்ந்த, தஞ்சை வாணன் - 3தஞ்சையில் இருக்கும் வாணன்,மலையத்திலே -பொதிய மலையிடத்து என்றவாறு - இது கண்ணழித்தல்.
| (பொழிப்புரை) அன்னப்புள் செந்நெல் செறிந்த வயலும், வாவியும் சூழ்ந்த தஞ்சைவாணன் பொதியவெற்பில் ஒரு கற்பகத்
|
| 1.`பொழிப்பே யகல நுட்ப மெச்சமெனப் பழிப்பில் சூத்திரம் பண்ணல் நான்கே` - என்பதனானுணர்க. (பாடம்.) 2. கருத்துரையாய். 3. தஞ்சாவூரில், தஞ்சாக்கூரில். தொல் - பாயிர உரை மேற்கோள்.
| |
|
|