266
கற்பொடு புணர்ந்த கவ்வை

 
  1`பாலொடு தேன் கலந் தற்றே`
என்புழிக்,  `கலந்ததற்றே` என்பது, `கலந்தற்றே`  என  நின்றாய் போற்  கொள்க.
கவை : என இடைக்குறை தணந்து - விட்டு நீங்கி. மைந்து - வலி. கதம் - சினம்.
பயந்தவள் - ஈன்றாள்.
     இஃதொன்றும் கண்டோரிரங்கற்கு உரித்து.
(339)    
செவிலி ஆற்றாத்தாயைத் தேற்றல்:
     செவிலி   ஆற்றத்தாயைத்   தேற்றல்என்பது, செவிலி ஆற்றாத  நற்றாயைத்
தேறுமாறு கூறுதல்.
  நன்றே யிதென்று முகமுக நோக்கி நகைநகையா
மன்றே அலர்சொல்லு மாதர்முன் னேதஞ்சை வாணன்தொல்சீர்
சென்றே பரந்த திசைகளெல் லாஞ்சென்று தேர்ந்தணங்கை
இன்றே தருவனன் னேவருந் தாதிங் கிருந்தருளே.
     (இ-ள்.)  அன்னே,   இவள்   ஒருவன்   பின்னே   சுரம்  போயின  இது
நன்றாயிருந்ததென்று   ஒருவர்  முகம்   ஒருவர்   நோக்கி  நகையை  நகைத்து
வெளியிலே   அலரைத்தூற்றும்  மாதர்முன்னே. தஞ்சைவாணனது  பழகிய கீர்த்தி
போய்ப்   பரந்த   திசைகளெல்லாம்   போய்த்   தேடி அணங்குபோல்  வாளை
இற்றைப்பொழுதே தருவேன்; யான் போய்வருவமளவும் வருந்தாது
இங்கிருந்தருள் என்றவாறு.

முன்  ஏகார  மூன்றும்  ஈற்றசை;  பின்  ஏகாரம்  ஒன்றுந் தேற்றம்.  `நன்றேயிது`
என்னுங்  குறிப்புமொழி  அசதிக்கண்தீதையுணர்த்தி  நின்றது. நகையா - நகைத்து.
மன்று - வெளி. தேர்தல் - தேடல். அணங்கு: ஆகுபெயர்.

(340)    

ஆற்றிடை முக்கோற்பகவரை வினாதல்:
ஆற்றிடை  முக்கோற்பகவரை  வினாதல்  என்பது,  செவிலி  தேடிப்  போங்கால்
வழியிடை எதிர்வரும்முக்கோலுடைய அந்தணரை வினாவுதல்.
 ஒருவெண் கடையிரு நீழல்முக்கோல்கொண் டொழுக்கத்தினால்
அருவெங் களரியைந் தாறுசெல் வீரரு ளீரெழுபார்
மருவெண் திசைபுகழ் வாணன்தென் மாறையென் வஞ்சியன்னாள்
பொருவெஞ் சுடரிலை வேலொரு காளைபின் போயினளே.
(இ-ள்.) ஒரு  வெண்குடையினது  பெரிய   நீழலிலே    மூன்று   தண்டுகொண்டு
ஆசாரத்தினால்     அரிய   வெவ்விய   களர்நிலத்திலியைந்து   வழிச்செல்வீர்,
ஏழுபாரிலும் மருவிய எண்டிசையிலுள்ளோராற் புகழப்பட்ட

1. குறள். காதற்சிறப்புரைத்தல் - 1.