268
கற்பொடு புணர்ந்த கவ்வை

 
அலங்கரிக்குஞ்  சித்திரப்  பாவைபோல் வரப்பட்ட பெண்ணே!  தஞ்சைவாணனின்
பகைவராயுள்ளார்  நெருங்கும் வலிய காட்டிலிருக்கும் எயினருக்கு  அருமையாகிய
மகளே!    அம்மகள்   போனவரியை   எனக்குச்   சொல்வாயாக    என்றவாறு.
     செருமகள் - வீரமகள்.  அயிர்த்தல் - ஐயமுறல், ஓவியம் -  சித்திரப்பாவை.
அதர் - வழி.   இப்பாட்டில்  இரண்டு   முன்னிலை   வந்ததற்கு  இலக்கணமும்
உதாரணமும் களவியலிற் கூறினாம், ஆண்டுக் (செய். 96) காண்க.
(343)    
செவிலி குரவொடு புலம்பல்:
 இரவேய் குழலியின் றேதிலன் பின்செல்லல் என்ற செர்ல்லாக்
குரவே அறவுங் கொடியைகண் டாய்கொடிக் கோகனகம்
தரவே யெனவந்த சந்திர வாணன் தரியலர்போம்
சுரவேய்அழல்வழி யேதனிப் போயவென் தோகையையே.

     (இ-ள்.)  தருதற்குக் கொடியொடு கூடிய பதுமநிதியென வந்த சந்திரவாணன்
தரியலர்போங்  காட்டில்  மூங்கிலழல்பொருந்திய  வழியில்  தனியேபோன   என்
தோகை   போல்வாளை   நீ   இவ்விடைக்   கண்டுழி, இருள்போன்ற  குழலாய்!
இவ்வயலான்பின்   செல்லாதே  என்று  சொல்லாத குரவே, நீ மிகவும் கொடியை
என்றவாறு.

எனவே,  நீ  சொன்னால்  மீளாளல்லாள்; வாளாவிருத்தலான்  அறவுங் கொடியை
யென்று   கூறினாள்.  ஏதிலன் - அயலான்.  `குரவேகொடியை`  என   இயையும்.
கொடை   மிகுதியாற்கட்டிய  கொடி  வாணன்மேலேற்க;  கொகனகம் - பதுமநிதி.
வேயழல் - மூங்கிலிற் பிறந்த அழல். தோகை : ஆகுபெயர்.
(344)    
சுவடு கண்டிரங்கல்:
     சுவடு   கண்டு   இரங்கல்  என்பது,  செவிலி  நிலத்தின்மேற்  காலழுந்திய
குறியைக் கண்டு இரங்கிக் கூறல்.

 தொடுசிலைக் கானவ ரோடிய வேற்றுச் சுவடுவையே
அடுசிலைக் காளை யடியவை யேறிந் தோரறிய
இடுசிலைப் பார்புரக் குந்தஞ்சை வாணன் இசைக்குருகப்
படுசிலைப் பாவை பதமிவை யேவண்டு பாடுகவே.
     (இ-ள்.)   அம்பு   தொடுக்குஞ்   சிலையையுடைய   ஆறலை    கானவர்
எதிர்நிற்கமாட்டாது   ஓடிய   வேறுபட்ட  அடிச்சுவடு அவையே, தனது வீரத்தை
அறிவுடையோ ரறியச் சயத்தம்பம் நாட்டி உலகத்தைக் காக்குந்   தஞ்சைவாணனது
பொதியமலையிடத்திருக்கும் பாவையடி இவை என்றவாறு.