|
|
எனவே, அடிச்சுவடு கண்டவுடன் தலைவியை நினைந்திரங்கிய வாறாயிற்று. பலராய் வந்தெதிர்த்துத் தலைவனெதிர் நிற்கமாட்டாது ஒருவர்போனவழி யொருவர் போகாதோடுவாரது அடிச்சுவடு, ஒருவரடிபோ லொருவரடி யிராது வேறுபட்டுத் தோன்றுதலால், `கானவரோடிய வேற்றுச்சுவடு உவை` என்றும், தனித்து நிற்றலின், `பாவைபதமிவை` என்றும் கருதிக் கூறினாளென்க. இடுசிலை - வெற்றியாலிடுஞ் சயத்தம்பம். இசைக் குருகப்படுசிலை - இராவணனைக் பிணக்கக் குறுமுனி பாடும் இசைக்கு உருகப்பட்ட பொதியமலை. வண்டு - அம்பு. பாடு - பக்கம். உகுதல் - விழுதல். |
(345) |
செவிலி கலந்துடன் வருவோர்க் கண்டு கேட்டல்: |
செவிலி கலந்துடன் வருவோர்க்கண்டு கேட்டல் என்பது, உடன்போக்குப்போய்த் தலைவனும் தலைவியும்போல அன்புகலந்து ஆற்றிடை வருவோர் இருவரைக் கண்டு செவிலி வினாதல். |
| யானகம் போத வருந்தநும்போல்வனப் பெய்திவெய்ய கானகம் போயினர் கண்டனி ரோகற்ப காடவிசூழ் வானகம் போர்பயில் வானவற் கீந்தருள் வாணன்றஞ்சைத் தேனகம் போருக மாதனை யாளுமொர்செல்வனுமே.
|
(இ-ள்.) கற்பகக்காடு சூழ்ந்த வானிடத்தைப் போர்செய்யுஞ் சேரனுக்குக் கொடுத்தருளுப்பட்ட வாணனது தஞ்சாக்கூரின் வாவிவியிலிருக்கும் மாதுபோல்வாளும் ஒரு செல்வனும் உங்களைப் போல் அழகுபொருந்தி யான் நெஞ்சு மிகவருந்த வெய்ய காட்டிடத்துப் போயினர்; நீங்கள கண்டீரோ, சொல்வீரர்க என்றவாறு.
|
அகம் - நெஞ்சு. போத - மிக. வனப்பு - அழகு. கானகம் - காட்டிடம். கற்பகாடவி - கற்பகக்காடு. வானகம் - வானிடம். வானவன் - சேரன். நகுதல் - ஒளிவிடல். |
(346) |
கலந்துடன் வருவோர் புலம்பல் தேற்றல்: |
கலந்துடன் வருவோர் புலம்பல் தேற்றல் என்பது, செவிலியிரங்கிப் புலம்புதலை எதிர்வந்தோர்தேற்றிக் கூறல். |
| யான்கண்ட அண்ணலு மெண்ணருங் காதலின் ஏகியவென் மான்கண் டனகண் மயில்கண்ட மாதரு மாதருமம் கான்கண்ட தண்ணளிச் சந்திர வாணன் தரியலர்போம் கான்கண்ட மெய்குளி ரப்பொய்கை சூழ்தஞ்சை காண்பர்களே. |