தஞ்சைவாணன் கோவை
274

 
  1`அலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்`
எனவும்,
  2`அற்றார்க்கும் அலந்தார்க்கும்`
எனவும் பிறரும் கூறியவாற்றானுணர்க. விம்முதல் - பூரித்தல்.
(352)    
பாங்கியர் கேட்டு நற்றாய்க்குரைத்தல்:
  வாளேய் விழிநின் மயிலனை யாள்தஞ்சை வாணன்வெற்பில்
வேளே யனைய விடலைபின் னேசுர மீண்டினிநம்
கேளேய்பதிவரு மென்னநல் லோர்சொல்லக் கேட்டனமிந்
நாளே யனையநன் னாளுள வோசென்ற நாள்களிலே.
(இ-ள்.)  வாள்போன்ற  விழியினையுடைய  நின்  மகளாகிய  மயில்  போன்றவள்
தஞ்சைவாணன்  வெற்பிடத்துக்  காமனையொத்த  விடலை  பின்னே  சுரம்போய்
மீண்டு  நம்  சுற்றத்தாரிருக்கும்  நகரின்கண்ணே வருமென்று நல்லோர்  சொல்லக்
கேட்டனம்;  ஆதலின்  இந்  நாளைப்போன்ற  நன்னாள்  கழிந்த    நாள்களிலே
யுளவோ என்றவாறு.

    வேள் - காமன்.    விடலை - பாலைநிலத்  தலைவன்.     கேள் - சுற்றம்.
ஏகாரம் மூன்றும் ஈற்றசை.
(353)    
நற்றாய் கேட்டவனுளங்கோள் வேலனை வினாதல்:
 தென்மாறை நன்னகர் மன்னவன் வாணன் செழுந்தஞ்சைசூர்
பொன்மா திரத்துப் புலனுணர் வீச்சுரம் போய்வரவோன்
என்மானை யென்மனை யிற்றரு மோதன்னை யீன்றநற்றாய்
தன்மா நகருய்க்கு மோசொல்லு வீரொன்று தானெனக்கே.
    (இ-ள்.) தென்மாறை      நன்னகர்க்கு     மன்னவனாகிய       வாணனது
செழுந்தஞ்சையைச்   சூழ்ந்த    அழகிய         திக்கினுள்ளார்    நினைக்கும் அறிவையெல்லாம்  அறிவீர்! சுரம் போய் மீண்டுவருந் தலைவன்
 மானனையாளை
என் மனையிலே தருமோ,
 தன்னையீன்ற நற்றாயிருக்கும் தன்  பெரிய   நகர்க்கே செலுத்துமோ, எனக்கு ஒன்று  சொல்வீர் என்றவாறு.
    பொன் - அழகு. மாதிரம்: ஆகுபெயர். புலன் - அறிவு. உய்த்தல் - செலுத்தல்.
வேலன் - முருகுவேளடையாளமாய்க் கையிலே வேல்பிடித்துத் திரிபவன்;
வெறியாட்டாளன்.

1. திருமுரு - 271.
2. அப்பர். கோயிற் பெரிய திருத்தாண்டகம் - 2.