|
|
பாங்கி தானது முன்னே சாற்றிய துரைத்தல்: |
| அன்னைக் கியம்பின னாண்டகை யான்முன் னறிந்துதென்னன் தன்னைப் பணிந்துகுற்றேவல்செய் யாது சமர்க்கெழுந்த மன்னைப் புறங்கண்ட வாணன்தென் மாறை வரையிலொங்கள் பொன்னைப் புணர்த்துநுங் கேள்முன்னர்நீபொன் புனைந்ததுவே.
|
(இ-ள்.) ஆண்டகையே! பாண்டியனைப் பணிந்து குற்றேவற் றொழின் முறைமை செய்யாது போர்க்கு எழுந்த மன்னைப் புறங் கண்ட வாணன் தென்மாறை வரையில் எங்கள் பொன்போன்ற வளைக் கூடி நும் சுற்றத்தார் முன்னம் நீ திருப்பூட்டியது யான் முன்னை யறிந்து அன்னைக்கு இயம்பினேன் என்றவாறு.
|
ஆண்டகை: அண்மைவிளி. தென்னன் - பாண்டியன். குற்றேவல் - சிற்றாளாய்ச் செய்யுமேவல். பொன்: ஆகுபெயர். பொன் புனைதல் - திருப்பூட்டுதல்.
|
`மணனயர் வேட்கையி னாற்றாய் செவிலியை வினாதல்` ஒன்றும வினாதல். `வரைந்தமை பாங்கி செவிலிக்குணர்த்`தலும், `வரைந்தமை செவிலி நற்றாய்க் குணர்த்த`லும், `பாங்கி தானது முன்னேசாற்றியதுரைத்த`லும் மூன்றுஞ் செப்பல். `தலைமக னுமர்க்கியம்பு` `சென்றென்றல்` ஒன்றும் மேவுதல். |
(359) |
தன்மனை வரைதல் முற்றிற்று. |