கட
281
வரைவு கடாதல்

 
`உன்னையுள்ளாது`   எனவும்,   `இப்போதள்ளி`       எனவும்      இயையும்.
(385)    
தலைவனைத் தலைவி யெதிர்கொண்ட பணிதல்:
 மருவிற் பெருநல மன்னுவ தாந்தஞ்சை வாணன்வெற்பர்
ஒருவிற் பசலை யுருக்குவ தாநமக் கூடலெவ்வா
றிருவிற் புருவ விளங்கொடி யேயெய்து மெய்தலில்லாத்
திருவிற் புனைநறுந் தார்வரை மார்பர் திருமுனின்றே.

(இ-ள்.) இரண்டு  விற்போன்ற புருவத்தையுடைய இளங்கொடியே!  தஞ்சைவாணன்
வெற்பர் நம்மை  மருவினராயின்  பேரழகு  நிலை  பெறுவதாம்; அவர்  நீங்கின்
பசலைநிறமும்  உருக்குவதாம்; இத்   தன்மையாகிய   நமக்கு    ஊடலெவ்வாறு,
விடுதலில்லாத்  திருவைப்   போல  அணியப்பட்ட  நறிய    தாரை    யணிந்த
வரைபோன்ற மார்பர் திரு முன்னின்ற பணிதும் என்றவாறு.

நலம் - அழகு.  ஒருவுதல் - நீங்குதல்.  எய்தும் - பணிதும்.   எய்தல் - விடுதல்.
இன்  உருபு ஒப்புப் பொருண்மைக்கண் வந்தது. புனைதல் - அணிதல்.  திருமுன்
தகுதி வழக்கு. எய்தும் என்றது பணிதும் என்னும் பொருள் கொள்ளுமோ எனின்,
தேவர் கூறிய கடவுள் வாழ்த்தில்,

  1`தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே`

என்பதனில்,  சேர்தும்  என்பதற்கு  வணங்குதும்  என  நச்சினார்க்கினியர் உரை
எழுதினார்.  சேர்தும் என்பதம் எய்தும்  என்பதும் ஒரு  பொருட்கிளவியாதலால்,
எய்தும் என்பதற்குப் பணிதும் எனவே பொருள் கொள்க.
(386)    
புணர்ச்சியின் மகிழ்தல்:
 மன்னவர் காம நெடுங்கடல் வாணன்தென் மாறையன்னாள்
தொன்னலம் வார்முலை மத்தந் தழீஇடத்தடந் தோளிணையாம்
பன்னக நாணிற் கடைத்திகழ் வார்திரைப் பட்டநன்னீர்
இன்னமிழ் தார்ந்திமை யோரமை யாவின்பம் எய்தினரே.

     (இ-ள்.) தலைவர்      காதலாகிய     நெடுங்    கடலில்        வாணன்
தென்மாறையன்னாளது  அழகு  பழகிய  வார்முலையாகிய   மத்தைத்   தழுவிய பெரிய   தோளிணையாகிய பன்னக  நாணினாற் கடைந்து, இதழின்கண்   நெடிய
அலையால்  உண்டாகப்பட்ட  நன்னீராகிய    இனிய   அமுதத்தை    ஆர்ந்து
இமையோரது தெவிட்டாத இன்பத்தை யெய்தினர் என்றவாறு


1. சிந்தாமணி. கடவுள் வாழ்த்து - 1.