கட
தஞ்சைவாணன் கோவை
298

 
நலம் - அழகு; தொல் - பழைமை;   மாறிப்பொருள் கொள்க.   மத்தம் - மத்து.
பன்னகம் - பாம்பு. திரை - அலை. அமையா - தெவிட்டா. வற்ற : கவிக்கூற்று.

களவிற்புணர்ச்சி  யெல்லாம்   தலைவன்   வற்றாய்   நிகர்த்தி     இப்புணர்ச்சி
கவிக்கூற்றாயினவாறு  என்னையெனின்,   தலைவி  நாணுடையளாதலால் தலைவி
செயலின்றித்  தலைவன்  செயலாய்  முடிதலின்  தலைவன்  கூற்றாய்  நிகழ்ந்தது;
கற்பியல்  அவ்வாறன்றி  இருவர்  செயலும்  ஒத்து  நிகழ்தலின்   இருவர் கூற்று
ஒரு கவிக்கண் கூறலாகாமையின் கவிக்கூற்றாய் நிகழ்ந்தவாறு காண்க.
(387)    
வெள்ளணி யணிந்து விடுத்துழித்
தலைமகன் வாயில் வேண்டல்:
வெள்ளணி அணிந்து விடுத்துழித் தலைமகன் வாயில் வேண்டல் என்பது, தலைவி
புதல்வனைப்  பயந்து  நெய்யாடிய   செய்திக்கு   அடையாளமாகிய வெள்ளாடை
முதலியன  அணிந்து  சேடியை  விடுப்புழி  அச்சேடியை  வாயிலாகத்  தலைவன்
வேண்டிக் கூறல்.

  என்பாற் குறையை நினைந்து மறாதெதிர் கொள்ளவல்லே1
தன்பாற் புலவி தணிகென்ற நீதஞ்சை வாணன்வையம்
அன்பாற் பரவும் புகழுடை யானரு ளேயனையாய்
உன்பாற் புலவி யுறாள்வண்ண வார்குழ லொண்ணுலே.

(இ-ள்.) வையம்    அன்பாற்    பரவும்  புகழுடையானாகிய    தஞ்சைவாணனது
அருளைப்போல்வாய்! அழகு பொருந்திய வார்தந்த குழலையுடைய  ஒண்ணுதலாள்
நின்னிடத்தில்  புலவியையுறாள்; ஆதலால்  என்னிடத்தில்  குறையை   நினைந்து
மறாதவண்ணம்  எதிர்கொள்ள  நீ விரைந்து  சென்று  அவனிடத்துப் புலவியை
ஆறச்செய்வாய் என்றவாறு.

  2`செல்லாமை யுண்டே லெனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை`

    என்பதனாறிக.  புலவி - ஊடல்.  வையம் - உலகு.     பரவுதல் - துதித்தல்.
ஒண்ணுதல்: ஆகுபெயர்.
(388)    

1. வல் - விரைவு.
2.குறள். பிரிவாற்றாமை - 1.