|
|
தலைவி நெய்யாடிய திருளை சாற்றல்: |
தலைவி நெய்யாடியது இருளை சாற்றல் என்பது, தலைவி புதல்வனைப் பயந்து நெய்யாடியதனைப் பாங்கி தலைவற்குச் சொல்லல்.
|
| மலர்புரை யேர்கொண்ட வாட்கணெங் கோமங்கை வாணன்தஞ்சைப் பலர்புகழ் பாலற் பயந்துநெய் யாடினள் பாங்கெவர்க்கும் அலர்பரை நீடொளி யாடியுட் பாவையன் னாட்குளநீர் புலர்புன லுரவென் னோதிரு வுள்ளமிப் போதுனக்கே.
|
(இ-ள்.) மலரை யொப்பாய் அழகுகொண்ட ஒளிபொருந்திய கண்ணையுடைய எமக்கரசாகிய மங்கை, வாணன் தஞ்சையில் பலரும் புகழப்பட்ட பாலனைப் பெற்ற நெய்யாடினள்; பாங்கியர் எவர்க்கும் அலரையொப்பாய் நீண்ட வொளியையுடைய கண்ணாடியுட் பாவைபோன்றாளிடத்து உள்ளன்பு புலர்ந்த புனலூர! இப்போது உனக்குத் திருவுள்ளம் யாதோ என்றவாறு.
|
`பலர் புகழ்` என்புழிச் சிறப்பும்மை விகாரத்தாற் றொக்கது. பயந்து - ஈன்ற. பாங்கு - பாங்கியர். `பாங்கிலன் றமியாளிடந் தலைப்படலும்` என்பதனானுணர்க. ஆடி - கண்ணாடி. `அன்னாட்கு` என்புழி, வேற்றுமை மயக்கம். உளநீர் - உள்ளன்பு. ஓகாரம் ஐயம்; என்னை, பரத்தையர் சேரிக்குச் செல்லத் திருவுளமோ, ஈண்டு உறையத் திருவுள்ளமோ என ஐயந்தருதலான் எனக் கொள்க. |
(389) |
தலைவன் தன் மனத்துவகை கூறல்: |
| மையணி வேல்விழி வாணுதல் கூர்ந்தது வாணன் றஞ்சைக் கொய்யணி நாண்மலர்க் கொம்பரன் னாள்குழ விப்பயந்து நெய்யணி மேனியி லையவி பூண்ட நிலையறிந்தே கையணி வால்வளை யைக்கண்ட நாளினுங் காதன்மையே.
|
(இ-ள்.) மையணிவேல்போன்ற விழியையும் வாணுதலையும் உடையாய்! வாணன் தஞ்சையிற் கொய்யப்பட்ட அழகாகிய நாண்மலரையுடைய கொம்புபோன்றவள் புதல்வனைப் பெற்று நெய்யணிந்த மேனியில் வெண்சிறுகடுகு பூண்ட நிலைமை யறிந்து கையிலணிந்த ஒள்ளிய வளையினை யுடையாளைக் கண்ட நாளினும் காதற்றன்மை மிகுந்தது என்றவாறு.
|
வேல்விழி வாணுதல்: அன்மொழித் தொகை. கூர்தல் - மிகுதல். அணி - அழகு. நாண்மலர் - முறுக்கவிழ்மலர். குழவி - மகவு.
|
| 1`குழவியு மகவு மாயிரண் டல்லவை கிழவ வல்ல மக்கட் கண்ணே`
|
என்பதனானுணர்க. பயந்து - பெற்று. ஐயவி - வெண்சிறுகடுகு |
|
1. தொல். பொருள். மரபியல் - 23. |