கட
தஞ்சைவாணன் கோவை
244

 
1நந்தை பத்திரை,   சயை,  இருத்தை,  பூரணை  என  முதற்றிதி     தொடுத்துப்
பஞ்சமிவரைக்கும் முதலாம் வட்டம், சட்டி தொடுத்துத் தசமிவரைக்கும் இரண்டாம்
வட்டம்,  ஏகாதசி  தொடுத்துப்  பூரணைவரைக்கும்  மூன்றாம்    வட்டமாதலின்,
`முந்நாண் மதிவட்டம்` என்றார்.  உவர்த்தல் - வெறுத்தல்.   புலத்தல் - ஊடுதல்.
எங்களை என்புழி,       வேற்றுமை மயக்கம்.    `அந்நாள் முந்நாள்`   எனவும்,
`ஆர்வமுற்று முயங்கியுவந்தமிழ்ந்து` எனவும்,   `இந்நாணஞ் சென்று முனிந்து மிக`
எனவும், `எங்களைப் புலவா நிற்றிர்` எனவும் இயையும்.
(403)    
ஆயிழை மைந்தனும் ஆற்றாமையும்
வாயிலாக வரவெதிர் கோடல்:
ஆயிழை  மைந்தனும்  ஆற்றாமையும்  வாயிலாக  வரவு  எதிர்கோடல் என்பது,
தலைவன் பரத்தையர் சேரிக்குத் தேரின் மேலேறிப் போம்போது  தெரிந்தெடுத்த
அணியை யணிந்த புதல்வன் குறுக்காக நிற்க. அப்புதல்வனைத் தழுவி யெடுத்துக்
கொண்ட   தலைவன்    ஆற்றாமையுடன்    வந்துழி,   தலைவி   புதல்வனும்
தலைவனாற்றாமையும் தூதாகத் தலைவனை எதிர்கொள்ளுதல்.
  வெள்ளம் பரந்தன்ன வேட்கைசென் றாலு மிகப்பெரியோர்
உள்ளஞ் சிறியவர் மேற்செலவ ரோவொளிர் கோமளஞ்செய்
வள்ளங் கமல மலர்த்தஞ்சை வாணன்தென் மாறையன்னப்
புள்ளம் புனல்வய லூரபுன் காமம் புகல்வதன்றே.
(இ-ள்.) கடல்    புரண்டுவந்தாற்    போலும்  வேட்கை   செல்லினும்   மிகவும்
பெரியராயினோர்   உள்ளஞ்   சிறியவராகிய   பரத்தையர்  பால்   செல்வரோ,
செல்லார்; விளங்காநின்ற    அழகாற்செய்த    கிண்ணம்போன்ற    கமலமலரில்
தஞ்சைவாணன்  தென்மாறை  அன்னப்  புள்ளிருக்கும்  அழகிய  புனலையுடைய
வயலூர! புல்லிய காமத்தை ஒரு பொருளாய்ச் சொல்வதன்று என்றவாறு.
எனவே  நீ  பரத்தையர்  சேரிக்குப்  போன தன்மையையல்லை என்றவாறாயிற்று.
வெள்ளம் - கடல்.  "கடலன்ன காமமுழுந்து"2 என்றார் பிறரும். உளஞ்சிறியவர் -
பரத்தையர்.  ஓகாரம் : எதிர்மறை.  கோமளம் - அழகு.    வள்ளம் - கிண்ணம்.
மலர் என்புழி, ஏழாம்வேற்றுமைத் தொகை. அம் - அழகு. புகல்வது - சொல்வது.
தாமரை மலரில் அன்னப

1. நந்தை - 1, 6, 11: பத்திரை - 2, 7, 12: சயை - 3, 8, 13:  இருத்தை - 4, 9, 14:
பூரணை - 5, 10, 15 - என மதிவட்டங்  கொள்ளப்படுவதனைப்  பிங்கலந்தையில்
வானவர் வகைத் தொகுதியுட் காண்க.
2. குறள். நாணுத்துறவுரைத்தல் - 7.