கட
31

கைக்கிளை

 

கடலாதலானும்,   தேவருக்கு   அமுதங்     கொடுத்ததாதலானும்,     நெடுமால்
பள்ளிகொண்ட இடமாதலானும், `திருப்பாற்கடல்` என்று கூறப்பட்டது.

     இவ்வாறு தலைவியும் ஐயுறாதது என்னையெனின்,  ஐயுறின்,  `கந்திருவனோ! முருகவேளோ!`   இயக்கனோ!  என   ஐயுற   வேண்டும். அங்ஙனம்   ஐயுறவே, அச்சந்தோன்றும்;தோன்றவே, காமவேட்கை நிகழாது.ஆதலால்,  கூறிற்றிலர்  எனக்
கொள்க.

(2)    

துணிவு:

     துணிவு  என்பது, கண்ணி  வாடுதல்   கண் இமைத்தல் முதலிய குறிகளான் மானிடமாதே யென, முன் ஐயுற்ற தலைமகன், தெளிந்து கூறல்.
மையார் குவளை வயல்தஞ்சை வாணனை வாழ்த்தலர்போல்
நையா தொழிமதி நன்னெஞ்ச மேஇனி நம்மினுந்தன்
நெய்யார் கருங்குழற் செம்மலர் வாடின நீலஉண்கண்
கையால் அழைப்பன போலிமை யாநிற்கங் காரிகைக்கே.

     (இ-ள்.) நல்ல  நெஞ்சமே,  இக்காரிகைக்கு  நம்மினும்  தனது  நெய்யார்ந்த கருங்குழலில்  சூடிய  செம்மலர்  வாடின; அன்றியும்  நீலம்  போன்ற மையுண்ட
கண்  கையினார்  வாவென்று அழைப்பன  போலும்  இமையாநின்றன; ஆதலால், கருமைபொருந்திய குவளை மலர்ந்த வயல் சூழ்ந்த தஞ்சைவாணனை  வாழ்த்தாத
தெவ்வர்போல நீ இனி நையாதொழிவாயாக.

     மதி: முன்னிலையசை, உன் கண் - மையுண்ட கண். நெய் - புழுகு.
1`நெய்யொடு குங்குமம் நிறைந்த நாணினாற்
பொய்கைகள்பூம்படாம் போர்த்தல் போன்றவே`

என்றார் பிறருமென்க.

(3)    

குறிப்பறிதல்:
 

      குறிப்பறிதல் என்பது, தலைவி வேட்கை, அவள் பார்வையால் தன்னிடத்து
உண்டென்று குறிப்பால் அறிவது.

மண்ணிற் சிறந்த புகழ்த்தஞ்சை வாணன் மலையவெற்பில்
பெண்ணிற் சிறந்தஇப் பேதைதன் பார்வை பெருவினையேன்-
எண்ணிற் சிறந்த இருந்துயர் நோய்தனக் கின்மருந்தாய்க்
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை யாவதுங் காட்டியதே.


     1. சிந்தா. நாமக - 51.