|
|
செறிந்த இருள் மிகுந்து துன்பத்தைப் பொருந்திய பின்பனிக் காலத்துத் துன்பப்படுகின்ற என்னை நினையார், யான் என்செய்கேன் என்றவாறு.
|
இன்னல் - துன்பம். கன்னற் கடிகை - நாழிகை. பகல் - ஞாயிறு. `காண்பரிதாம்` என்னும் பெயரெச்சம்.
|
| 1`தத்த மெச்சமொடு சிவணுங் குறிப்பி னெச்சொ லாயினு மிடைநிலை வரையார்`
|
என்னுஞ் சூத்திரவிதியால், இடையே பலசொல் வரினும், பனி என்னும் பெயரைக் கொண்டு முடிந்தது. |
(418) |
தோழி யாற்றுவித்தல்: |
| வடுக்கண் டனையகண் மங்கைநல் லாய்தஞ்சை வாணன்வெற்பின் அடுக்கங் களிர அசைகின்ற வாடை யகன்றவர்க்கு நடுக்கஞ்செய் பின்பனி நாளின்வந் தாரமர் நண்பனுற்ற இடுக்கண் களையவென் றேயகன் கானம் இகந்தவரே.
|
(இ-ள்.) தஞ்சைவாணன் வெற்பிடத்து மாவடுவைக் கண்டாற்போன்ற கண்ணையுடைய மங்கைநல்லாய்! மலைப்பக்கமெல்லாங் களிர அசைந்து வருகின்ற வாடைக் காற்றுப் பிரிந்தவர்க்கு நடுக்கஞ் செய்யப்பட்ட பின் பனிக்காலத்து, போரிடத்து நட்புக்கொண்ட வேந்தனுற்ற துன்பத்தை நீக்கவென்று அகன்ற சுரத்தைக் கடந்தவர் வந்தார், நீ புலம்பல் ஒழிவாய் என்றவாறு. |
வடு - மாவடு. அடுக்கம் - மலைப்பக்கம். வாடை - வாடைக்காற்று. அமர் - போர். இடுக்கண் - துன்பம். கானம் - சுரம். இகந்தவர் - கடந்தவர். |
(419) |
துயைவயிற் பிரிவு முற்றிற்று. |
|
1. தொல். சொல். விளையியல் - 40. |