43
தஞ்சைவாணன் கோவை 

 
பெறப்பட்டது.   நிறை - மறைபிறரறியாமை.  1`நிறையெனப்   படுவது   மறைபிற
ரறியாமை` என்றார் பிறரும். அன்றியும்,

2`காமக்கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு`

என்று கூறியவாற்றானும் உணர்க.
(14)    
வறிதுநகை தோற்றல்:
      வறிதுநகைதோற்றல்   என்பது,  தலைவி  முகத்தே  சிறுநகை   தோற்றல்.
என்னை?  3`வறிதுசறிதாகும்`  என்னுஞ் சூத்திரத்தான் உணர்க. நகை தோற்றல் -
நகை  வெளியாய்த்  தோன்றியதென்னின் பொருந்தாது. என்னை, தலைவன்  முன்
நாணுடையளாதலின்     பல்தோன்றச்   சிறுமுறுவல்   தோன்றலும்  அமையாது. அமையாதாயின்,     வறிது   நகைதோற்றல்   என்னுங்   கிளவிப்     பொருள்
பொய்க்குமேயெனின், அற்றன்று;

4`முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு`

      என்பதனான்   நகை   வெளித்தோன்றாதென்பது   கூறியவாறு   உணர்க.
நகைதான்      தோன்றுமாறென்னை     யெனின்,     தலைவன்      சொற்கு
வேட்கையாலுடன்பட்டு       மகிழ்ச்சியான்     முகமலர்ந்து      அம்மலர்ச்சிக்
குறிப்பினான் நகையெனத் தோற்றுவித்தவாறு உணர்க.

எறிதேன் அலம்புஞ் சிலம்பினெப் போதும் இரந்திவள் பின்
வெறிதே திரிந்துமெலிந்தன நாமுள்ள மெல்லியற்குப்
பிறிதோகொ லென்னும்பெருந்தகை தேறப் பெரிதுயிர்த்து
வறிதே முறுவல்செய் தாள்தஞ்சை வாணன் வரையணங்கே.

      (இ-ள்.) இறகாற்  காற்றை யெறியும் வண்டுகள் எப்போதும் ஆரவாரிக்குங்
சிலம்பிடத்தில் குறையிரந்து இவன் பின்னே பயனின்றியே திரிதலைச் செய்து  நாம்
மெலிந்தனம்; இம்மெல்லியற்கு உள்ளம் வேறென்று சொல்லும் பெருந்தகை
தேறுமாறு பெரியதாய் நெட்டுயிர்ப்பெறிந்து தஞ்சைவாணன் வரையணங்கு
போல்வான் வறிதே முறுவல் செய்தாள் என்றவாறு.

      `எறிதேன்`  என்பது ஒற்றுமை நயத்தால் சினைவினை முதன்மேல்  நின்றது.
அலம்பல் - ஆரவாரித்தல். `எப்போதும்` என்பதனை

1. கலித். நெய்தல் - 16.
2. குறள். நிறையழிதல் - 1.
3. தொல். சொல். உரியியல் - 40.
4. குறள். குறிப்பறிவுறுத்தல் - 4.