தஞ்சைவாணன் கோவை
46 

 
மணியும்  பெறவேண்டுமென்று   சிந்தித்தலை  முயன்றாற்  பெறலாம்  என்றவாறு.

      தவஞ்செய்து   முயன்றோர்க்கும்  எய்துதற்கு  அரிதாகிய   இவளை  நம்
முயற்சியாற்   பெற்றமையான்,   நாகமணியும்   பெறலாமென்று  தன் முயற்சியின்
பெருமை கூறினானென்க. என்னை?

1`ஊழையும் உப்பக்கங் காண்பர்உலைவின்றித்
தாழ துஞற்று பவர்.`

      இக்குறளில்,   ஊழில்   ஒருவற்குப்  பேறில்லாவிடினும்,  முயற்சி ஊழைப்
புறங்கண்டு   நிறைத்தது  முடிக்கும் எனக் கூறினாராகலின் என்க, இவண் முயற்சி
யாதெனின்,

2`காட்சி முதலாச் சாக்கா டீறாக்
காட்டிய பத்துங் கைவரு மெனினே
மெய்யுறு புணர்ச்சி எய்துதற் குரித்தே`

      என்னுஞ்   சூத்திரவிதியால்,   இப் பத்து அவத்தைக் கண்ணும் மடியின்றி
முயன்று செய்தல் எனக் கொள்க.

      ஆயின், சாக்காடு என்பது என்னையெனின், உணர்விலனாதல். மலைநாடு - சேரமானாடு.  வழுதி - பாண்டியன். எண்ணெண்கலை - கல்வி.  மால் - பெருமை.
வரை - மலை.     பொன்னாண் - பொன்னினாற்   செய்த   நாண்.  முயன்று -
முயற்சிப்பட்டு. முயங்கினம் - புணர்ந்தனம். இனி - இன்று.
(18)    
புகழ்தல்:
      புகழ்தல் என்பது, தலைவியது நலத்தைப் பாராட்டல்.

 திரண்மா மரகதச் செய்குன்று காளென்றுஞ் செவ்வனநீர்
முரண்மா தவங்கள் முயன்றுசெய் தாலு முளரிமங்கை
சரண்மாறை வாணன் தமிழ்த்தஞ்சை நாட்டென் தனியுயிர்க்கோர்
அரண்மா னனையகண் ணாள்கொங்கை போறல் அரிதுமக்கே.


      (இ-ள்.)   திரண்ட  பெரிய  மரகதத்தாற்  செய்த  செய்குன்றுகாள்,  நீர்
செவ்விய  வனத்தின்கண்ணிருந்து  இரவு  பகல் எப்பொழுதும் முலைக்கு  நிகராக
வேண்டுமென்று  மாறுபட்ட  பெருந்தவத்தை  முயன்று  செய்கின்றீர்; செய்யினும்,
திருமக.  ளடைக்கலமாக  விருக்கும்  மாறையென்னும் வாணனது தமிழ்த்  தஞ்சை
நாட்டகத்து   துணையில்லாத   எனது   உயிர்க்கு   அரணும்  மானும் அனைய
கண்ணாள் கொங்கையை யொப்பாதல் உமக்கு அரிது என்றவாறு.

      செய்குன்று: வினைத்தொகை; செய்குன்றாவது - மாதர்  விளையாடுவதற்கு
மரகதமணியாற் செய்யும் மேடை. செவ்வனம் என்புழி ஏழாம் வேற்றுமைத் தொகை.
முரண் - மாறுபாடு; மாறுபாடாவன - மழையில் நனைந்தும், வெயிலில் உலர்ந்தும்,
பனியில் குளிர்ந்தும்,    காற்றில்   அலைபட்டும்   நிலையிற்    பிரியாதிருத்தல்.
மா - பெருமை.        முயன்று - வருந்தி.     முளரி     மங்கை - திருமகள்.
சரண் - அடைக்கலம்.      தனி - துணையின்மை.   அரண்    மான்  என்புழி
உம்மைத் தொகை;    மதன்போர்க்கு    அரணாயிருத்தலின்    அரண்   என்று
கூறியது. போல்தல் - போறல்.


1. குறள், ஆள்விளை - 10.

2. அகப்பொருள் விளக்கம், அகத்திணை 36