வன்புறை
51

 

     (இ-ள்.) பாரிடத்து  நிலைபெற்ற  புகழையுடைய   வாணனது   தென்மாறை
வெற்பில்  வரும்  பேரருவி  தண்ணமையாக   இளமயில ்  ஆடும்   இப்பெரிய
சோலையிடத்து,  இன்று  மாந்தளிர்  போல் ஒளிவிடப்பட்ட  அழகை விளர்த்துக்
காட்டுவது  என்னே!   விதியானது  கூட்டுவிக்க  நம்முட்  பிணித்த   காதலைப்
பிரிப்பவர் யார்? ஆதலால், நீ ஐயுறேல் என்றவாறு.

`அருவி யின்னியமாக இளமயில் ஆடும்` என்பதனான். வெற்பு வருவிக்கப்பட்டது.
`பார் மன்னிய` என இயையும், மாமை - அழகு; நிறமுமாம்.

 1`தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு`

என்னும்     குறளில்,   `அம் மா அரிவை`   என்பதற்கு,   `அழகிய    மாமை
நிறத்தையுடைய     அரிவை`     என்று    பரிமேலழகர்     எழுதியவுரையாற்
கண்டுகொள்க.

விளர்த்தல்  -  மனக்  கவற்சியால் வெளுத்தல்.  விதி - ஊழ்வினை.  பின்னிய -
பிணித்த. இனி - இன்று.  இன்னியம்  ஈண்டுத் தண்ணுமை.  இருமை - பெருமை.
பொழிற்கே என்புழி வேற்றுமை மயக்கம்.  ஏகாரம் இரண்டும ் ஈற்றசை. தலைவி :
முன்னிலையெச்சம்.

(22)    
பிரியேனென்றல்:
பிரியேனென்றல் என்றது,  நீர்க்கரைப் பசுங்கொடி  வேனில்  வெப்பத்தால் நிறம்
வேறுபடல்போல,  புணர்ச்சியின்பத்தாற்  பெற்ற அழகு,  எம்பெருமான்  பிரிவன்
என்னுங் கவற்சியால் விளர்த்த  வெளுப்பு நீங்காமை கண்ட தலைமகன்  நின்னிற்
பிரியேன் என்று வற்புறுத்திக் கூறல்.

 வண்கொடி யேய்மதில் மாறை வரோதயன் வாணனொன்னார்
எண்கொடி யெனெய்த இவ்வண்ண நீயிரங் கேலிரங்கேல்
நுண்கொடி யேரிடை வண்டிமிர் பூங்கழல் நூபுரத்தாள்
பெண்கொடி யேபிரி யேன்தரியேனிற் பிரியினுமே.

(இ-ள்.) கொடுக்குங்  கொடையாற்  கட்டிய  கொடி   பொருந்திய மதில்  சூழ்ந்த
மாறைநாட்டில்,  வரத்தினாலுதயஞ்  செய்த   வாணனுக்குப்   பகைவரா யுள்ளார்
எய்தும் எண்ணத்தைக் கொடியேனாகிய யான் எய்துமாறு, விளர்ப்பு   வண்ணமாக
நீ யிரங்கற்க இரங்கற்க;  நுண்ணிய  கொடிபோல்  அழகையுடைய   இடையையும்
வண்டுக ளிமிரும்  பூவணிந்த  குழலையும்  பரிபுரமணிந்த  தாளையும்   உடைய
பெண்கொடியே, நின்னிற் பிரியேன்; அன்றிப்


1. குறள். புணர்ச்சி மகிழ்தல் - 7.